முத்துக்குமார் என்ற இளம் பத்திரிகையாளர், இன்று காலை சென்னையில் உள்ள இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தன்னை எரியூட்டிக் கொண்டார்.
ஈழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாட்டினை கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர்.. அதற்காக இந்திய அரசைக் கண்டித்து தான் தற்கொலை செய்வதாக முழக்கமிட்டுக் கொண்டே.. தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.
75 விழுக்காடு தீப்புண்கள் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 comments:
எங்களுக்காக தமிழுறவுகளாகிய நீங்கள் செய்யும் போராட்டங்களுக்கு என்றைக்கும் உங்களுக்கு கடன்பட்டு இருப்போம். ஆனால் உண்ணாவிரதத்தாலோ, தீக்குளிப்பாலோ
என்ன பயனை அடைய முடியும் என்று விளங்கவில்லை. உங்களையும் நாம் இழக்க விரும்பவில்லை. இதுபோன்ற செய்கைகளால் நம் இன எண்ணிக்கை குறைகிறதென்று எதிரிகள் மகிழ்வார்களே ஒழிய, ஒருபோதும் நிலை நமக்கு சாதகமாகாது. தயவு செய்து போராட்டவடிவத்தை மாற்றி,
அரசியல்ரீதியாக செயல்பட்டு, தமிழர்களுக்கு விடிவைத்தருகிற அரசை பதவியில் அமர்த்துங்கள்.
Post a Comment