Monday, January 19, 2009

ஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு பத்திரிகைச் செய்திஈழத் தமிழரைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம்.

தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு :

  1. தமிழகமெங்கும் உள்ள அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளராக சென்னைப் பல்கலைக் கழகத்தின் மாணவர் கே. வெங்கடாசலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  2. சிங்கள அரசின் தமிழினப் படுகொலைக்கு துணைப் போகும் இந்திய அரசைக் கண்டித்து கூட்டமைப்பின் சார்பில் வரும் ஜனவரி 21 முதல் தமிழகமெங்கும் வகுப்பு புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத் தமிழ் மக்களைக் காக்க நடக்கும் இப்போராட்டத்திற்கு அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், மற்றும் பேராசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து ஜனநாயக மாணவர் அமைப்புகளும் இந்தப் போராட்டத்திற்கு தங்கள் பேராதரவினைத் தரவேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறோம்.

(ஒருங்கிணைப்பாளர்)
கே. வெங்கடாசலம் - 94443-18945

மேலும் தொடர்புக்கு :
பா. பாக்கியராஜ் (திருச்சி) - 98658-62861
செந்தில் (சென்னை) - 94445-04767
இனியன் (சென்னை) - 98845-27997
பன்னீர்செல்வம் (கோவை) - 98944-53095

0 comments: