Tuesday, January 15, 2008

புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு

புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு
சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து

"கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார்.

சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானதுமாகும் பேராசிரியர் சகாதேவன் அவர்கள் எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப் பிட்டுள்ளார்: நார்வே பிரதிநிதிகள் மேற் கொண்ட அமைதிக்கான முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்த காரணத்தால் முழுமையாகத் தோல்வி அடைந்து விட்டன. சர்வதேச சமூகம் முன்வந்து சிங்களருக்கும் தமிழருக்கும் இடையே சமரசம் ஏற்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது இலங்கையின் உள்நாட்டில் எதிர்ப்பு ஏற்படலாம். ஆனால் ஐரோப்பாவிலுள்ள சனநாயகச் சக்திகள் அதை சமாளிக்கும் திறன் பெற்றவை. விருப்பு வெறுப்பற்ற அரசி யல் ரீதியான அணுகுமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும். தென் இலங்கையில் அதாவது சிங்களவர் களுக்கு நடுவே அமைதி முயற்சிக்கான கருத்தொற்றுமை உருவாக வேண்டும்.
விடுதலைப் புலிகளைக் குறித்து சர்வதேச சமூகம் சரியாகப் புரிந்து கொண்டுள்ளதா என்பது ஐயத்திற் குரியது. தமிழீழ இலட்சியத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட அமைப்பு அது. அதற்காகத் தன்னை முழுமையாகத் தியாகம் செய்து கொள்வதற்கும் அது துணிந்துள்ளது. விடுதலைப் புலிகளின் தலைமை எத்தகைய சமரசத்திற்கும் சுலபத்தில் பணிந்துவிடாது.


அமைதிக்கான சமரச முயற்சி யின் போது ஒரு தரப்பினரை நிர்ப்பந்தப் படுத்தலாம். ஆனால் அந்தத் தரப்பைத் தண்டிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் நேர்மாறான விளைவுகள் ஏற்பட்டு விடும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மீது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடை விதித்தது சமரச முயற்சிகளைப் பலி வாங்கி விட்டது. இதன் விளைவாக சமரச முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டன. இந்த நடவடிக்கை தவிர்க்கக் கூடியது என ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் கருதுகின்றன. விடுதலைப் புலிகளின் மீது வல்லரசு நாடுகள் சில மேற்கொண்ட நிர்ப்பந்த முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அந்நாடுகள் கைக்கொண்ட ஒரு சார்பான அணுகுமுறையே காரணமாகும். புலிகளை நிர்ப்பந்தப்படுத்திய இந்த வல்லரசுகள் சிங்கள அரசை நிர்ப்பந்தப் படுத்துவதில் தவறிவிட்டன.
சர்வதேச சமூகம் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரில் யாரிடமும் ஒரு சார்பாக நடந்து கொள்வதோ அல்லது ஒருவருக்கு எதிராக மற்றொரு வருக்குச் சாதகம் காட்டுவதோ சமரச முயற்சிகளை சந்தேகத்திற்குரியதாக ஆக்கி செயல்பட முடியாததாக்கி விடும்.

"தமிழீழமும் இந்தியாவின் பாதுகாப்பும்" பேரழிவைத் தடுப்பது எப்படி?
விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்துவதும் அதற்கு எதிராக சிங்களருக்கு இராணுவ ரீதியான உதவிகளை சர்வதேச சமூகம் செய்வதும் புலிகளையும் அவர்களுக்கு ஆதரவான மக்களையும் தனிமைப்படுத்திவிடும். மேலும் புலிகளும் தமிழ் மக்களும் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு ஆளாக்கிவிடும். புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் இந்தியாவின் பாதுகாப் பைக் கேள்விக்குறி ஆக்கிவிடும். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடுவே உள்ள இடைவெளி என்பது நிலைமையைச் சீராக்குவதில் பெரும் முட்டுக் கட்டையாக விளங்கும். பாக் சலசந்தியின் இரு பக்கமும் வாழும் தமிழர்களைச் சினம் கொண்ட மக்களாக மாற்றுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு நல்லதல்ல. 1949ஆம் ஆண்டு யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்த "இந்து சாதனம்" என்னும் தமிழ்ப் பத்திரிகை தனது வைரவிழாவைக் கொண்டாடியது. 1889ஆம் ஆண்டு ஆறுமுக நாவலரால் இந்தப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இந்தப் பத்திரிகையின் துணை நிறுவனமான யாழ் இந்து கல்லூரித்
திடலில் விவேகானந்தருக்கும் மகாத்மா காந்திக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் வைர விழாவிற்கு இந்திய இலங்கை கவர்னர் செனரல்கள் வாழ்த்து அனுப்பினார்கள். இலங்கை சுதந்திரம் பெற்று ஓராண்டிற்குப் பின் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்தியா வின் கவர்னர் செனரல் வாழ்த்துச் செய்தி அனுப்பியது என்பது மிக முக்கிய மானதாகும். இலங்கைத் தமிழர்களை இந்தியா எப்படி மதிக்கிறது என்பதற்கு இது ஒரு சான்றாகும்.


இலங்கை விடுதலை பெற்ற அன்று இந்திய வம்சாவழித் தமிழர்கள் அதிகமாக இருந்தனர். இந்தியாவின் மீது மிகுந்த அனுதாபம் கொண்ட அவர்களை வலுப்படுத்துவதன் மூலம் இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுத்து இந்தியாவின் மற்றும் தென் ஆசியாவின் பாதுகாப்பு நலன்களுடன் இணைந்து செயல்படுமாறு செய்திருக்கமுடியும். ஆனால் இந்திய அரசு சிங்களத் தலைவர்களை தாசா செய்யும் நடைமுறைக்கு ஒவ்வாத வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடித்தது. அத னால் சிங்களத் தலைவர்களும் இந்தியா வைச் சந்தேகத்துடனும் வெறுப்புடனும் பார்த்தார்கள்.


1950களிலும் 1960களிலும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது கீழ்க்கண்ட முக்கியமான அம்சங்களைக் கொண்டிருந்தது. அணிசேராக் கொள்கையும் சீனாவைக் குறித்த அணுகுமுறையுமே அவையாகும். இதற்கு இலங்கையின் ஆதரவை இந்தியா நாடியது. இதற்குப் பதிலாகத் தங்கள் தமிழர் விரோதப் போக்குக்கு இந்தியா ஆதரவு தரவேண்டும் என இலங்கைத் தலைவர்கள் வற்புறுத்தித் தங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொண்டனர். இதன் விளைவாக 1949ஆம் ஆண்டு இந்திய வம்சா வழியினர் குடியுரிமையை சிங்கள அரசு பறித்தது. 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டுமே இலங்கையின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்றியது. 1983ஆம் ஆண்டில் தமிழருக்கு எதிரான இனக் கலவரத்தை நடத்தியது. 1954ஆம் ஆண்டிலும் 66ஆம் ஆண்டிலும் இந்திய வம்சாவழி மக்களை நாடு கடத்துவது என்ற ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு இந்தியா கையெழுத்திட்டது. 1972ஆம் ஆண்டு இலங்கை சிங்கள புத்த நாடு எனப் பிரகடனம் செய்யும் அரசியல் சட்டத்தை நிறைவேற்றியது.

சிங்களத் தலைவர்களின் தாளத்திற்கு இந்தியா ஆடியது. இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் கொண்டிருந்த இலங்கைவாழ் தமிழ் மக்களின் நலன்களைப் பலி கொடுக்க இந்தியா தயங்கவில்லை. சிங்கள மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது உண்மை யான கூட்டாளியான தமிழர்களை இந்தியா கைவிட்டது. ஆனால் சிங்களத் தலைவர்கள் ஒரு போதும் இந்தியாவுக்கு நன்றியுடன் இல்லை.

இலங்கை சீனாவுக்கு முக்கிய மான இடம் கொடுத்துக் கெளரவித்தது. வங்காள தேசத்தின் போராட்டத் தின்போது பாகிசுதான் உளவு விமானங் கள் இலங்கைக்குப் பறந்து வந்து பெட்ரோல் போட்டுக்கொள்ள இலங்கை அனுமதித்தது. இலங்கையைத் தாசா செய்யும் இந்தியாவின் கொள்கையில் 1980களின் தொடக்கத்தில் ஒரே ஒருமுறை மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தியின் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு வலுவான காரணங்கள் இருந்தன.

1977ஆம் ஆண்டு இலங்கையில் செயவர்த்தனாவின் ஆட்சி நடைபெற்ற போது அவரின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கை என்பது இந்தி யாவின் நலன்களுக்கு எதிராக அமைந் தது. 1977 மற்றும் 1983ஆம் ஆண்டு களில் தமிழர்களுக்கு எதிராக நடை பெற்ற இனப் படுகொலைக்கு எதிராகத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கிய நிகழ்ச்சி கண்ட தில்லி பதட்டம் அடைந்தது. ஆரம்ப காலத்திலேயே தமிழ்ப் போராளிகளையும் சிங்கள அரசையும் கட்டுப்பாட்டில் கொண்டு வர பிரதமர் இந்திராகாந்தி முடிவு செய்தார். இலங்கையை இரு நாடுகளாகப் பிரிப்பதற்கு இந்திராகாந்தி ஒருபோதும் ஆதரவாக இல்லை. ஆனால் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப் படும் அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்ப் போராளி களுக்கு உதவ முன் வந்தார். இம்முயற்சி தோற்குமானால் ஒரு தீர்வைக் கொண்டு வர அங்கு இந்தியா தலையிடுவது நியாயமானது என்ற எண்ணம் உருவாகும். பல்வேறு போராளிகளுக்கும் அவர் உதவினார். அதற்கு நோக்கம் இருந்தது. இதற்கான முயற்சிகள் முற்றுப் பெறும் கட்டத்தில் 1984ஆம் ஆண்டு நவம்பரில் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார்.

நடைபெறாத நிகழ்ச்சிகள் குறித்து தீர்ப்புக் கூற வரலாற்றுத் துறையால் இயலாது. ஆனாலும் இந்திராகாந்தி உயி ரோடு இருந்திருப்பாரேயானால் தென் ஆசிய நலன்களுக்கு ஏற்ற வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டிருக்கக் கூடும். சிங்கள அரசோ அல்லது போராளிகுழுக்களோ தென் ஆசிய நலன்களுக்கு அப்பால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் அளவுக்கு வலிமை பெற்றி ருக்கவில்லை. வல்லரசுகளுக்கிடையே மறைமுகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டம் அது. தென் ஆசியாவின் காவல்காரனாக இந்தியா செயல்பட்ட நேரமும் அதுதான்.

இந்திராகாந்திக்குப் பின்னால் பிரதமர் பொறுப்பை ஏற்ற அவரது மகன் இராசீவ் காந்தி தனது தாயார் தவறான கொள்கையைக் கையாண்டதாகவும் அவரது ஆலோசகர்கள் அவருக்கு தவறான ஆலோசனையை வழங்கியதாக வும் நினைத்தார். ஆனால் இது உண் மைக்கு முற்றிலும் மாறானதாகும். உண்மையில் அவர் தான் அவருடைய ஆலோசகர்களால் தவறாக வழி நடத்தப்பட்டார்.

இலங்கை அரசிடமிருந்து பணம் பெறுவோர் பட்டியலில் இந்திய உளவுத் துறை அதிகாரிகள், வெளியுறவு அதிகாரி கள் இருந்தார்கள் என அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

இராசீவ்காந்தி அரசின் வெளியுறவுக் கொள்கை உருப்படாத கொள்கை என்பதை முதன்முதலாக விடுதலைப் புலிகள் உணர்ந்தனர். மற்ற போராளிக் குழுக்கள் உணரவில்லை. எனவே புலிகள் மாற்று நடவடிக்கைகளுக்கு திட்டம் தீட்டினர். 1985ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தென் ஆசியாவுக்கு வெளியே உள்ள பல நாடுகளில் விடுதலைப் புலிகள் தங்கள் அலுவலகங் களைத் திறந்தனர். இசுரேல் நாட்டில் பயிற்சி பெறத் தங்கள் உறுப்பினர்களைப் புலிகள் இயக்கம் அனுப்பி வைத்தது. ஆனால் அதே நேரத் தில் சிங்கள இராணுவத்திற்கும் இசுரேல் பயிற்சி அளித்தது என்ற உண்மை பின்னால் தெரிய வந்தது. முதன்முதலாக இந்தியா வுக்கும் தென்ஆசியாவுக்கும் வெளியே இந்த பிரச்சினை கொண்டு செல்லப் பட்டது.
1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படை இலங்கைக்கு அனுப்பப் பட்டது தவறான காலம் தாழ்ந்த நடவடிக்கை ஆகும் 1984ஆம் ஆண்டு க்கும் 1987ஆம் ஆண்டுக்கும் இடையே செயலற்றுப் போன இந்தியாவின் கொள்கை மீது பல போராளி இயக்கங்கள் தங்கள் நம்பிக்கையை இழந்து விட்டன. விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றிலு மாக விலகி நின்று மற்ற போராளி இயக்கங்களைவிட வலிமையில் விஞ்சி நின்றது. போட்டி போராளி இயக்கங் களையும் அரசியல் கட்சித் தலைவர் களையும் விடுதலைப் புலியினர் கட்டுப்படுத்த அல்லது அப்புறப்படுத்த முடிந்தது. சிங்கள இராணுவம் தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளின் விளைவாக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மக்களும் சர்வதேச நாடுகளிடையே இதற்கான எதிரொலியை ஏற்படுத்தினார்கள்.


இந்தியாவுக்கும் இலங்கைக்கும் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு இந்தச் சூழ்நிலையில் நிலைமையைச் சமாளிப்பதற்குரியதாக இல்லை. தமிழர்களுக்கு இந்தியா அளிப்பதற்கு முன்வந்தவை போதுமானவையாகவும் இல்லை. இந்தியா வாக்களித்த மிகச் சொற்பமானவற்றைக் கூட சிங்கள அரசியல்வாதிகள் நிறைவேற்ற முன்வர வில்லை. இந்தியாவின் சார்பில் பிரச்சினையைச் சந்திக்க அனுப்பப்பட்ட வர்களும் திறமையற்றவர்களாக இருந் தார்கள். மீண்டும் ஒரு முறை சிங்களத் தலைவர்கள் தாங்கள் சிறந்த இராசதந்திரி கள் என்பதை நிலைநாட்டி விட்டார்கள்.

தங்கள் மீது நம்பிக்கை வைத் திருந்த தமிழ் மக்களின் நலன்களைக் காக்க இந்தியா தவறிவிட்டது. 1987ஆம் ஆண்டில் தன்னால் தீர்க்கக் கூடிய அளவு இருந்த இனப் பிரச்சி னையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு களையும் இந்தியா நழுவ விட்டுவிட்டது. தென் ஆசியப் பகுதியின் பாதுகாப்பைப் பொறுத்த வரையில் இந்தியா பெரும் இழப்புக்கு உரியதாக ஆயிற்று. ஆனால் தான் கொண்ட குறிக் கோளுக்காக விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக நின்று எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாமல் தன் வழியே சென்றது. தங்களுடைய துயரங் களிலிருந்து தங்களை விடுவிக்கும்
வலிமை படைத்தவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே என நம்பிய தமிழர்கள் அனைவரும் அதற்குப் பேராதரவை அளித்தார்கள். இதன் மூலம் அதன் வலிமை பெருகிற்று.

ஆனால் இலங்கை இனப் பிரச்சினை இலங்கைக்குள்ளாகவே அல்லது தென் ஆசியாவுக்குள்ளாகவே தீர்க்கப்படாமல் போனதன் விளைவாக அது சர்வதேச அரசியல் சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது. இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை நிறைவேற்ற சர்வதேச சமூகம் முன் வரவேண்டும் என வேண்டிக்கொண்டதில் விடுதலைப் புலிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் அதே வேளையில் தங்கள் மீது நம்பிக்கை வைத்த மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விடுதலைப் புலிகள் கடமைப்பட்டுள்ளனர்.

ஆனால் இராணுவ ரீதியில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் சிங்கள அரசுக்கு சர்வதேச சமூகம் உதவிகள் செய்து வருகின்றது. ஆனால் உலகில் எந்த நாட்டின் ஆதரவும் இல்லாமல் விடுதலைப் புலிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில் விடுதலைப் புலிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான மக்களுக்கும் நிலைமையை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இதன் விளைவு என்பது இந்தியாவின் பாதுகாப்புக்குப் பேரபாயமாக எதிர்காலத்தில் விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கையில் துன்பப்படும் மக்களுக்கு பேரழிவு ஏற்படாத வகையில் தடுக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உண்டு. இந்தியாவும் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது. சிங்கள அரசுகளுடன் செய்து கொண்ட இரகசிய உடன்பாடுகளும் இரகசிய உதவிகளும் வேண்டாத விளைவுகளையே தரும். இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இடைவெளி என்பது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும். பாக் சலசந்தியின் இரு புறமும் வாழும் தமிழர் களைக் கோபம் அடைய வைப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஏற்றதல்ல.

Tuesday, January 8, 2008

உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளித்தனர் நேருவும்-இந்திராவும்

உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளித்தனர் நேருவும்-இந்திராவும் இனவெறியர்களுக்கு ஊக்கம் ஊட்டியவர் ராஜீவ் நேரு, இந்திரா வகுத்த கொள்கையை அழித்தவரும் அவரே!

உலகின் தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளித்த இந்திய அயலுறவுக் கொள்கையை அழித்தவர்தான் ராஜீவ்காந்தி

இந்திராகாந்தி, காமராசர் போன்றோரின் நெருங்கிய சகாவான பழ. நெடுமாறனின் அதிரடிப் பேட்டி


நேர்காணல் : ஏழ்பனை நாடன



கேள்வி : இந்திய அயலுறவுக் கொள்கையின் பொற்காலம் என்று எந்தக் காலத்தை நீங்கள் கருதுகிறீர்கள்?

இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்பது ஜவகர்லால் நேரு, இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றபோது அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற காலகட்டம் என்பது உலகம் இருவேறு முகாம்களாகப் பிரிந்து கிடந்த காலகட்டம். சோவியத் ஒன்றிய முகாம் ஒன்று; அமெரிக்க ஆதரவு முகாம் மற்றொன்று. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னால் இருவேறு முகாம்கள் உலகத்தில் அன்றைக்குத் தோன்றி இருந்தன. இரண்டு முகாம்களுக்கிடையே முட்டலும் மோதலும் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்த காலகட்டம். ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் அடிமைகளாக இருந்த பல்வேறு ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் தங்களின் சுதந்திரத்திற்காகப் போராடி விடுதலை பெற்றுவந்த காலமும் அதுதான்.

இந்தச் சூழ்நிலையில் புதிதாக சுதந்திரம் பெற்ற இளம் நாடுகளை அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் போட்டிபோட்டுக்கொண்டு தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தன. அந்த இரு வல்லரசுகளின் போட்டி என்பது உலகம் பூராவும் வியாபித்துப் பரவியிருந்தது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில் நேட்டோ, சீட்டோ என்ற பெயரில் சோவியத் நாட்டிற்கு எதிராகப் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆங்காங்கே தன் முகாமை விரிவுபடுத்திக் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையில் ஜவகர்லால் நேரு இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை வடிவமைத்ததோடு மட்டுமல்ல புதிதாக விடுதலை பெற்ற இளம் நாடுகளுக்கான ஒரு வழிகாட்டும் கொள்கையாகவும் அதை உருவாக்கினார் என்பதுதான் முக்கியமானது. புதிதாக விடுதலை பெற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை ஒருங்கிணைத்து அணிசேரா நாடுள் என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார். இரு வேறு முகாம்களிலும் சாராத அணிசேரா நாடுகள் முகாம் உருவாக்கினார். அதுதான் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடித்தளமாக அமைந்தது.

இது இரண்டு விதத்தில் உதவி செய்தது. அதில் ஒன்று: மூன்றாவது உலகப்போர் மூளுவதைத் தடுத்து நிறுத்தியது இந்த மூன்றாவது முகாமே. இரண்டாவது: புதிதாகச் சுதந்திரம் பெற்ற இளம் நாடுகள் பொருளாதார ரீதியில், ராணுவ ரீதியில் அமெரிக்காவிடமும், சோவியத் ஒன்றியத்திடமும் உதவி பெறக்கூடிய நிலையில் இருந்தன. அதன் காரணமாக அந்த நாடுகளிடம் அடிமையாகி விட்டன என்று கூறமுடியாது.

தங்கள் நலனுக்கு ஏற்ற வகையில் சோவியத் ஒன்றியத்துடன் சேர்ந்து சில உதவிளைப் பெறுவது என்ற முறையிலே தங்களுடைய சுதந்திரத்தையும், தனித்தன்மையையும் இழந்து விடாமல் அதே நேரத்தில் மற்ற முகாம்களுடனும் உறவாடினார்கள். இந்தியா கூட சோவியத் ஒன்றியத்தின் உதவியில் சில பெரும் தொழில்களை இந்தியாவில் துவங்கிற்று. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் உதவியுடன் சில தொழில்களைத் துவங்கிற்று. ஆனால் ராணுவ ரீதியிலே எந்த நாட்டுடனும் உடன்பாடு செய்து கொள்வதில்லை என்பதிலே இந்தியா தெளிவாக இருந்தது. அதை அணிசேரா நாடுகளும் பின்பற்றின. இதன் விளைவாக மூன்றாவது உலகப்போர் மூளுவது அறவே தவிர்க்கப்பட்டுவிட்டது. இல்லாவிட்டால் கொரியா போர் மூண்ட நேரத்தில் சூயஸ் கால்வாய் சம்பந்தமாக ஒரு போர் வெடித்தபோது அது உலகப்போராக மாறியிருக்கும். ஆனால் அதைத் தடுத்ததிலே இந்தியா பெரும்பங்கு வகித்தது. அணிசேரா நாடுகளும் அதில் பங்கு வகித்தன என்பது முக்கியமானது. ஆக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் பொற்காலம் என்பது ஜவகர்லால் நேருவின் காலம் என்றுதான் சொல்லவேண்டும்.

உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் போராடியபோது அவர்களுக்காக நேரு குரல் கொடுத்தார். 1946ஆம் ஆண்டில் முதன் முதலாக அவர் இடைக்கால அரசின் பிரதமராக இருந்தபோது இந்தோனேசியா டச்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு சுகர்ணோ தலைமையில் போராடியபோது டில்லியில் முதலாவது ஆசிய மாநாட்டை நேரு கூட்டினார். அன்று இந்தியாவே முழுமையாக சுதந்திரம் பெற்றுவிடவில்லை. அதற்கு ஓராண்டு கழித்துதான் இந்தியா முழுமையான சுதந்திர நாடாகிறது. ஆனாலும் ஒரு இடைக்கால அரசின் பிரதமராக இருக்கும்போதே இந்தோனேசியாவின் சுதந்திரத்திற்காக ஆசிய நாடுகளையெல்லாம் கூட்டி "டச்சு ஏகாதிபத்தியமே வெளியேறு" என்று தீர்மானம் போட்டவர் நேரு. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசு மற்ற கறுப்பின மக்களை ஒடுக்கியபோது தென்னாப்பிரிக்காவை உலக நாடுகள் புறக்கணிப்புச் செய்யண்ேடும் என்பதற்கு ஐ.நா. பேரவையில் தீர்மானம் கொண்டுவரச் செய்து நிறைவேற்றி, தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை ஒதுக்கி வைக்கும் கொள்கையைக் கடைப்பிடித்து நேரு வெற்றியும் பெற்றார்.

சூயஸ் கால்வாய் பிரச்சினையில் எகிப்தில் மன்னராட்சியை ஒழித்து நாசர் தலைமையில் புதியதாகத் தோன்றி இருந்த ஒரு ஜனநாயக அரசை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள் படையெடுத்து நசுக்க முயற்சித்தபோது, நேரு அணிசேராத நாடுகளின் உதவியுடன் அதைத் தடுத்து நிறுத்தினார். ஆக உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் எங்கெங்கே சுதந்திரம் பெறப் போராடினார்களோ அவர்களுக்கெல்லாம் நேரு பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஆதரவு கொடுத்தார் என்பதுதான் முக்கியமானது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடிநாதமாகவும் அது இருந்தது. உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டும், அதற்கு இந்தியா உதவவேண்டுமென்பதும் அவரது கொள்கையாக இருந்தது. ஆக, பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு அம்சங்களை எல்லாம் நாம் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் கூட நேருவின் காலத்தில் வகுக்கப்பட்ட இந்த வெளிநாட்டுக் கொள்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையானது. அதனால்தான், அதன் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியானாலும், ஜனதாக் கட்சி ஆட்சியானாலும், பாரதீய ஜனதா ஆட்சியாயிருந்தாலும், அந்தக் கொள்கையிலிருந்து எவராலும் விலகிச் செல்ல முற்படவில்லை. ஆங்காங்கே சிறுசிறு மாற்றங்கள் செய்திருக்கலாமே ஒழிய அடிப்படையில் அணிசேராக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கைகளிலிருந்து எந்தக் கட்சியும் விலகிச் செல்ல முடியவில்லை. ஆக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வெளிநாட்டுக் கொள்கையை நேரு வகுத்தார். எனவே, இந்தியாவின் பொற்காலம் நேருவின் காலம்தான்.

கேள்வி: சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக நேரு விளங்கினார். எனவே இந்த வெளிநாட்டுக் கொள்கையை அவர் வகுப்பதற்கு உதவியாக இருந்த காரணிகள் என்ன? இந்தக் கொள்கையை அவர்தான் வகுத்தாரா? அல்லது அப்பொழுதுதான் முதல் தடவையாக சுதந்திர இந்தியாவில் பதவியேற்ற அதிகாரிகள் வகுத்தனரா? இல்லை அந்த நேரத்தில் முதல்முறையாகத் தவழ்ந்து விளையாடிய இந்திய உளவுத்துறை வகுத்ததா?

இந்தக் கொள்கையை வகுத்ததில் சுதந்திரத்திற்கு முன்னாலேயே காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பங்கிருந்தது. காங்கிரஸ் கட்சி ஒரு வெளியுறவுத்துறையை தனது கட்சியில் அமைத்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில் வெளியுறவுத்துறை ஒன்றை அமைத்தார்கள். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றபோது அதை அமைத்தார். அவர் அதற்குப் பொறுப்பாளராக நேருவை நியமித்தார். அதுமட்டுமல்ல. உதாரணத்துக்கு-சீனாவின் மீது 1938- 39களில் ஜப்பான் படையெடுத்து. போர் நடைபெற்றபோது அங்கே பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு மருத்துவ உதவி அளிப்பதற்காக காங்கிரசின் சார்பில் டாக்டர் கோட்னிஸ் என்பவர் தலைமையில் ஒரு மருத்துவ தூதுக்குழுவை காங்கிரஸ் கட்சி அனுப்பியது. அப்போது இந்தியா அடிமையாக இருந்தது. ஆனாலும் சுதந்திரமாக செயல்பட்டு ஒரு மருத்துவக் குழுவை அனுப்பி அந்த மக்களுக்கு சேவை செய்தது. அதேபோல ஸ்பெயின் நாட்டில் பிராங்கோ என்ற சர்வாதிகாரியை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்குப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று அன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது. ஐரோப்பாவில், பிரிட்டனில் ஏராளமான இந்திய இளைஞர்கள் அந்தப் போராட்டத்தில் உதவி செய்வதற்காகத் தங்கள் பெயரை எல்லாம் பதிவு செய்தார்கள். அதிலே ஒருவர் இந்திராகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது. 16 வயது மாணவியாக இந்திராகாந்தி இருந்தபோது படையில் சேர்ந்து ஸ்பெயினில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிற போரில் உதவுவதற்கு முன் வந்தார். ஜவஹர்லால் நேருவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது தூதராக அனுப்பியது. அவர் ஸ்பெயின் நாட்டின் எல்லையில் போய் அங்கு திரண்டிருந்த பல்வேறு நாட்டுத் தொண்டர்களிடம் பேசி உற்சாகப்படுத்தி ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். இப்படிக் காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே வெளியுறவுக் கொள்கையிலே தீவிரமான கவனம் செலுத்தியது. அது படிப்படியாக வளர்ந்து நேரு அவர்களே பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் அதிகாரப்பூர்வமாக அதை அமுலுக்குக் கொண்டுவரமுடிந்தது. ஆக இதற்கான அடித்தளம் என்பது சுதந்திரப் போராட்டக் காலத்திலேயே காங்கிரஸ் கட்சிக்குள்ளே உருவாக்கப்பட்டு விட்டது. அதில் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களும், நேரு அவர்களும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை இப்படி இருக்க வேண்டும் என்று வடிவமைப்பதிலே முக்கிய பங்கு வகித்தார்கள்.

கேள்வி : நேருவுக்கு பிந்திய காலத்தில் இந்த கொள்கை அடிப்படையான மாற்றம் அடைய துவங்கியது எப்போது?

இந்தக் கொள்கையில் பெரிய மாற்றம் எதுவும் வரவில்லை. இந்திராகாந்தி இருந்தபோது அதை அவர் அப்படியே தொடர்ந்து கடைப்பிடித்தார்.

பின்னாலே ஜனதா கட்சி ஆட்சி 1979ல் வந்தபோது அன்றைக்கு பிரதமராக மொரார்ஜி தேசாயும், வெளிவிவகாரத்துறை அமைச்சராக வாஜ்பாயும் இருந்தார்கள். வாஜ்பாய் ஜனசங்கத்தைத் சேர்ந்தவர். ஆனாலும் கூட இந்த அணிசேராக் கொள்கையில் இருந்து அவர் மாறவில்லை. அப்படியே அவர் அதைப் பின்பற்றினார். ஜனதா அரசும் அப்படியேதான் பின்பற்றியது. விலகிச் செல்லவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையில் வேண்டுமானால் அவர்கள் தீவிரமாக இருந்தார்களே தவிர மொத்தத்தில் இந்தக் கொள்கையிலிருந்து விலகவில்லை. ஆனால் ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜீவ்காந்தி 1985ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பு அவர் தன்னுடைய பாட்டனாரும், தன் தாயாரும் எத்தகைய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை உணரவில்லை. அதிகாரிகள் அவரை தவறாக வழிநடத்தினார்கள் என்பதுதான் உண்மை. அன்றைக்கு இந்தியாவின் தூதுவராக இருந்த தீட்சித், இந்தியாவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளராக இருந்த பண்டாரி போன்ற அதிகாரிகள் அவரை வழிமாற்றி நடத்தினார்கள். அப்பொழுதுதான் முதன்முதலாக நேரு அமைத்த பாதையில் இருந்து இந்திய அரசு விலகிச்செல்லத் துவங்கியது. அப்பொழுதுதான் உலகம் முழுதும் அடிமைப்பட்ட மக்கள் எங்கு போராடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கிற இந்தியாவின் கொள்கையிலிருந்து தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கு சுதந்திர இந்தியாவின் படை அங்கு அனுப்பப்பட்டது. இந்திய வரலாற்றில் கறைபடிவதற்கு காரணமானவர் ராஜீவ்காந்திதான். வேறுயாருமல்லர். அவருடைய தாயாரும், அவருடைய பாட்டனாரும் கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு நேர்மாறான திசையில் ராஜீவ்காந்தி சென்றார். அதில் வெற்றிபெறவில்லை. படுதோல்வியடைந்தார். ஆனால் ராஜீவுக்குப் பின்னால் வந்த அரசுகளாவது, ராஜீவின் இந்தத் தவறான கொள்கைகளைத் திருத்தியிருக்க வேண்டும் அல்லது தூக்கியெறிந்திருக்க வேண்டும். முன்னால் இருந்த நிலைமைக்குப் போக வேண்டும் என்று அவர்களும் நினைக்கவில்லை. செய்யவில்லை; அதனால் இன்னும் தொடர்ந்து ராஜீவின் தவறான கொள்கையையே அவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள்.

கேள்வி: இதற்கு ராஜீவுக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்தோர், ஜவகர்லால் நேரு வகுத்த அயலுறவுக் கொள்கையின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு காரணமாக இருக்குமோ?

புரிந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல பல்வேறு உள்நோக்குப் போக்குகளும் (யங்ள்ற்ங்க் ஒய்ற்ங்ழ்ங்ள்ற்) இதிலே வந்துவிட்டன. உதாரணமாக இலங்கை இனப்பிரச்சினையை பொறுத்தவரையில் இந்திராகாந்தியின் அணுகுமுறை என்ன? 83ல் ஜூலையில் கொழும்பில் கலவரம் ஏற்பட்டு 3000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது இந்திராகாந்தி பகிரங்கமாகக் கண்டித்தார். திட்டமிட்ட இனப்படுகொலை இலங்கையில் நடக்கிறது என்று பகிரங்கமாகச் சொன்னார். ஏங்ய்ர்cண்க்ங் என்ற வார்த்தையை முதன்முதலாகப் பயன்படுத்தினார். இலங்கையே ஒரு சிறிய நாடு; அதில் இனப்பிரச்சினை ஒரு சிறிய பிரச்சினை. ஆனால் அந்தப் பிரச்சினை பற்றிப் பேசுவதற்காக இந்தியாவின் மூத்த இராஜதந்திரிகள் இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து அனுப்பினார். ஒருவர் வெளிநாட்டு அமைச்சர் பி.வி. நரசிம்மராவ், அடுத்தவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, ஒரு சிறிய நாட்டுப் பிரச்சினையைப் போய்க் கவனிப்பதற்கு இரண்டு மூத்த இராஜதந்திரிகளை இந்திராகாந்தி அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? இலங்கை அரசுக்கு ஒன்றை உணர்த்த விரும்பினார். "இந்தியா இந்தப் பிரச்சினையை முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறது. ஜாக்கிரதை", என்பதை உணர்த்துவதற்கு இரண்டு ராஜதந்திரிகள் அனுப்பப்பட்டனர். "இது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட பிரச்சினை இதில் வேறு யாரும் தலையிடக்கூடாது" என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்துவதற்காகவும் இப்படி மூத்த ராஜதந்திரிகளை அனுப்பி அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை எடுத்தார். ஆனால் அவருக்குப் பின்னால் ராஜீவ் காலத்திலிருந்து இன்றுவரை என்ன நடக்கிறது? ராஜீவ், பண்டாரி என்ற ஒரு அதிகாரியை இந்தப் பிரச்சினை பற்றிப் பேச இலங்கைக்கு அனுப்பினார். இலங்கைப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை ஒரு அதிகாரியை அனுப்புவதன் மூலம் ராஜீவ்காந்தி குறைத்துவிட்டார். இது ஜெயவர்த்தனாவுக்குப் புரிந்தபோது அவர் தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினார். அதுதான் முக்கியமானது. சரி இன்றைக்கும் என்ன நடக்கிறது? எம்.கே. நாராயணன், சிவசங்கர் மேனன் போன்ற அதிகாரிகளைத்தான் இனப்பிரச்சினை பற்றிப் பேச இந்திய அரசு அனுப்புகிறதே தவிர ராஜதந்திரிகளை அனுப்பவில்லை. இதன் மூலம் இந்தியாவே இந்தப் பிரச்சினையை முக்கியமாகக் கருதவில்லை என்ற ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்திவிட்டார்கள். இது ஒரு பெரிய பின்னடைவினை இந்தப் பிரச்சினையில் ஏற்படுத்திவிட்டது.

இந்திராகாந்தி காலத்தில் கையாண்ட அணுகுமுறைவேறு. ராஜீவ் காந்தி காலத்தில் கையாண்ட அணுகுமுறை அதற்கு நேர் எதிரானது. இதன் காரணமாக ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்களிப்பு என்பது நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போய்விட்டது. இந்தியாவின் பிராந்திய நலன்களுக்கு உட்பட்ட ஒருநாட்டில் சீனாவும் பாகிஸ்தானும் இஸ்ரேலும் அமெரிக்காவும் இன்னும் பிற நாடுகளும் தலையிட்டு ஆதிக்கம் செலுத்தும் நிலை வந்ததென்பது இந்தியா செய்த தவறினால். இந்திராகாந்தி இருந்தவரைக்கும் வேறு எந்த நாடும் இந்தப் பிரச்சினையில் தலையிட துணியவில்லை. ஆனால் இந்திராவின் மறைவுக்குப் பிறகு அத்தனை நாடுகளும் இலங்கையில் இறங்கிவிட்டன. அது இந்தியாவின் நலனுக்கு ஆபத்தானது என்பதை டில்லியில் இருப்பவர்கள் இன்னும் உணரவில்லை.

கேள்வி : இந்திராவிற்குப் பின் ராஜீவ்காந்தி இந்தியாவின் பிரதமராக, காங்கிரஸின் தலைவராகப் பதவி ஏற்க நேரிட்டது. இது இந்திராவின் மனதில் இருந்த திட்டமா அல்லது வேறு வழியில்லாமல் தலைமை நாற்காலியில் ராஜீவ் என்பவர் திணிக்கப்பட்டாரா?

ராஜீவ்காந்தி இந்திராவின் மூத்த மகனாக இருந்தபோதிலும்கூட அவரை அரசியலுக்குக் கொண்டுவர இந்திராகாந்தி விரும்பவில்லை. ஏன் என்றால் இவர் அதற்கு லாயக்கற்றவர் என்பது இந்திராகாந்தியின் முடிவு. எனவேதான் மூத்தமகன் இருக்கும்போது இரண்டாவது மகன் சஞ்சய் காந்தியை அரசியலுக்குக் கொண்டு வந்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக அவரை ஆக்கினார். அவருக்கு அரசியலில் முக்கியத்துவம் எல்லாம் அளிக்கப்பட்டது. அப்போது ராஜீவ்காந்தி விமான ஓட்டியாகத்தான் இருந்தார். அவருக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. அதுவும் உள்ளூர் விமான ஓட்டியாகத்தான் இருந்தார். வெளிநாடுகளுக்குப் போகவில்லை. ஆனால் சஞ்சய்காந்தி ஒரு விமான விபத்தில் திடீரென்று இறந்தவுடன் இந்திராகாந்தி தன் வாழக்கையில் செய்த பெரிய தவறு என்னவென்றால் புத்திர பாசத்தின் விளைவாக ராஜீவ்காந்தியை அரசியலுக்குக் கொண்டு வந்ததுதான். அதன் மூலம் அவர் தன் குடும்பத்திற்கு மட்டுமல்ல இந்த நாட்டிற்கே பெரும் கேட்டை விளைவித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசியல் அனுபவம் கொஞ்சமும் இல்லாமல் அரசியல் நாட்டமும் இல்லாமல் சுகபோகியாகத் திரிந்த ராஜீவ்காந்தியைக் கொண்டுவந்து பெரிய பதவியில் உட்காரவைத்தபோது அதற்கு ஏற்றவராக அவர் தன்னை ஆக்கிக்கொள்ளவில்லை. அவர் அதற்கான பயிற்சியைப் பெறுவதற்கு முன்னாலேயே இந்திராகாந்தி இறந்துபோனார். எனவே அவருக்கு எந்தப் பயிற்சியும் இல்லை. சுற்றிலும் துதிபாடிகள் மட்டுமே இருந்து அவரை "ஓ.... ஓ..." என்று புகழ்ந்தார்கள். ஏற்கனவே எதைப்பற்றியும் எதுவும் தெரியாத ஒருவருக்கு துதிபாடிகள் தவறான பாதையைக் காட்டினார்கள். கடைசியில் அவரது அத்தனை திட்டங்களும் தோல்வியடைந்தன. அவர் அந்த பிரதமர் நாற்காலிக்கு லாயக்கற்றவர் என்பதை அவர் ஆண்ட ஐந்தாண்டு காலத்தில் நிரூபித்துவிட்டார். 1985ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜவகர்லால் நேருவோ, இந்திராகாந்தியோ பெற்றிராத பெரும் வெற்றியை ராஜீவ்காந்தி இந்திராகாந்தியின் மரண அனுதாப அலையினால் பெற்றார். கிட்டத்தட்ட 350க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் கட்சியிலே வெற்றிபெற்றார்கள். ஐந்து ஆண்டுகள் கழிவதற்குள் கிட்டத்தட்ட சகல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி அவர் தலைமையில் படுதோல்வியைச் சந்தித்தது. நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை இல்லாது போயிற்று அவருக்கு. ஆக ராஜீவ்காந்தி ஒரு திட்டமிட்ட படுதோல்வியாளர் (பர்ற்ஹப் எஹண்ப்ன்ழ்ங்) .

கேள்வி : மத்தியில் ஜனதாக் கட்சி ஆட்சி அமைத்தபோது இந்திராகாந்தி கைது செய்யப்பட்ட வேளையில் ராஜீவ்காந்தியும், அவரது மனைவியும் எடுத்த நிலைப்பாடு என்ன?

இந்திரா காந்தியும், சஞ்சய் காந்தியும் ஜனதா ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது ராஜீவும், சோனியாவும் நாட்டைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்கள் லண்டனில் போய் தான் வாழ்ந்தார்கள். இந்தியாவிற்கு வரவேயில்லை. மீண்டும் இந்திராகாந்தி வெற்றிபெற்று பிரதமரான பின்புதான் இந்தியா திரும்பினார்கள். தன்னுடைய தாயாருக்குத் தோல்வி ஏற்பட்டிருக்கும்போது அருகில் இருந்து ஆறுதல் சொல்லவேண்டியவர், தானும் தன் குடும்பமும் தப்பித்தால் போதும் என்று நினைத்து ஓடிப்போனார்.

கேள்வி: இன்று இருக்கின்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு இந்த உண்மைகள் எதுவும் தெரியாதா? இந்தியாவிற்கு சுதந்திரத்தைக் கொண்டு வந்ததே ராஜீவ்காந்தி என்பது போல இவர்கள் மாரடித்துக் கொள்வதும், சபதம் எடுத்துக் கொள்வதும் எவ்வளவு தூரம் நியாயமானது?

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை ஒருபோதும் இவர்கள் அறிந்தது இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல அவர்களில் பெரும்பாலோர் துதிபாடிகளாக இருக்கின்றார்கள். மக்களிடம் சொந்த செல்வாக்கில்லாதவர்கள், மக்களிடம் வேர் இல்லாதவர்கள், இவர்கள் எல்லாம் காங்கிரஸ் தலைமையில் ராஜீவ்காந்தியோ, சோனியா காந்தியோ, இந்திராகாந்தியோ யார் இருந்தாலும் அவர்களின் நிழலில் இவர்கள் பதவிகளைப் பெற்றார்கள். சொந்தமாக இவர்களுக்கென்று எந்தச் செல்வாக்கும் கிடையாது. அப்படிப் பட்டவர்கள்தான் ராஜீவ்காந்தியைச் சுற்றி நின்று அவருக்கு ஆலோசனை வழங்கினார்கள். இப்பொழுதும் அந்தக் கூட்டம்தான் சோனியா காந்தியைச் சுற்றி நின்று ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் இருக்கின்ற பெரும்பாலோர் அந்தக் கட்சிக்கே சம்பந்தமில்லாதவர்கள். சென்ற நாடளுமன்றத் தேர்தலில் சொந்த மாநிலத்தில், மராட்டிய மாநிலத்தில் அந்த மக்களால் படுதோல்வி அடையச் செய்யப்பட்டவர் சிவராஜ் பாட்டில் சோனியா துதிபாடி என்ற காரணத்தினால் தேர்தலில் தோற்றுப்போன அவரைத் தூக்கி இந்தியாவின் உள்துறை அமைச்சராக உட்கார வைக்கிறார். இந்தியாவின் உள்துறை அமைச்சர் என்பது ஒரு பெரிய பதவி. அதில் தேர்தலில் மக்களாலேயே தோற்கடிக்கப்பட்ட ஒருவரைக் கொண்டுவந்து நியமிக்கிற அளவிற்கு சோனியாகாந்தி இருக்கிறார் என்று சொன்னால் "வெளியில் நடப்பது என்ன? மக்கள் தீர்ப்பு என்ன?" என்பதெல்லாம் அவருக்குக் கொஞ்சமும் தெரியவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. இன்றைக்கு மத்திய அரசிலே அமைச்சராக இருக்கிற பலருக்கு சொந்த மாநிலத்தில் செல்வாக்கே கிடையாது.

கேள்வி: காங்கிரஸ் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

காங்கிரஸ் கட்சி தனது அகில இந்திய அந்தஸ்தை இழந்து ரொம்ப காலமாகிறது. இந்தியா பூராவும் சகல தேசிய இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட அந்தஸ்தை அடியோடு இழந்துவிட்டது. காரணம் அந்தக் கட்சிக்கு தேசிய அளவில் ஒரு தலைமை இல்லை. தேசிய இன மக்களாலும், சகல மொழி பேசும் மக்களாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தேசியத் தலைமை காங்கிரசுக்கு இல்லை. அந்தக் கட்சியிலுள்ள எந்தத் தலைவருக்கும் இந்த தகுதி இன்று இல்லை. ஆகவே இந்தியா பூராவும் ஒரு கட்சியாக, ஒரு போதும் காங்கிரஸ் இயங்க முடியாது. வேண்டுமானால் பேருக்கு இருக்கலாம். அவ்வளவுதான். அந்தக் கட்சி தன்னுடைய சிறப்புகளை எல்லாம் இழந்தாகிவிட்டது. அது ஒரு பெருங்காய டப்பா.

கேள்வி: காங்கிரஸ் கட்சி ஒரு பெருங்காய டப்பாவாக இருப்பதைக் கூட நாம் ஜீரணித்துக் கொள்ளலாம், ஆனால் அந்தக் கட்சியின் அயலுறவுக் கொள்கைகளை, பார்ப்பன இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் உளவுத்துறை சிற்றரசர்களும் தீர்மானிப்பது இந்த பிராந்தியத்திற்கே ஒரு ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கும் என்று கருதுகிறோம். உங்கள் கருத்தென்ன?

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஏன் என்று சொன்னால் அதிகாரிகள் வழிநடத்தும் ஒரு அரசாக இந்திய அரசு மாறிவிட்டது. காரணம் என்ன? அமைச்சர்களாக இருப்பவர்கள் அந்தப் பதவிக்குக் கொஞ்சமும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். ஒன்றும் தெரியாது. மக்கள் செல்வாக்கும் கிடையாது. இதைப் புரிந்து கொண்ட அதிகாரிகள், அதிகார வர்க்கத்தின் கை ஒரு ஆட்சியில் ஓங்குமானால் இந்த நாடு சர்வாதிகாரப் பாதையில் போகிறது என்பதுதான் அதன் பொருள். அண்டை நாடான பாகிஸ்தானில் அதுதானே நடந்தது. அந்த நாட்டின் நிறுவனத் தலைவர் ஜின்னா அவருக்குப் பின்னால் லியாகத் அலிகான் ஆகியோர் இறந்து போன பின்னால் வெறும் பொம்மை போன்ற தலைவர்கள் ஆட்சியிலே அமர்ந்தார்கள். அதிகாரிகளும், ராணுவத் தளபதிகளும் அவர்களை ஆட்டிப் படைத்தார்கள். இறுதியிலே இராணுவத் தளபதிகளுக்கே ஆசை வந்து அவர்களே ஆட்சியிலே அமர்ந்து கொண்டார்கள். அதைத் தடுக்க முடியவில்லை அரசியல்வாதிகளால், இங்கேயும் இந்த நிலைமை வரலாம். அதிகார வர்க்கத்தின் கை ஓங்குவதென்பது ஒருபோதும் நன்மை தராது. ஒரு வலிவற்ற அரசியல் தலைமை இருக்கும்போது அதிகார வர்க்கத்தின் கை ஓங்குவது இயற்கை. அதை யாரும் தடுக்க முடியாது. அது நாட்டுக்குத் தீங்கை விளைவிக்கும்.

கேள்வி: இந்தியாவினுடைய இலங்கை சம்பந்தப்பட்ட அயலுறவுக் கொள்கை ஒரு இரட்டைத் தன்மையுடன் இப்போது செயல்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் ஒன்றைச் சொல்கிறார்கள் அதற்கு நேர் எதிரான கருத்துக்களை எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இன்றி இராணுவ அதிகாரிகள் சொல்கிறார்கள். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன?

உதரணமாக இலங்கைக்கு இந்திய அரசு உதவி செய்யும் விசயம் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பகிரங்கமாக அறிவித்தார். இலங்கை அரசுக்கு ஒருபோதும் ராணுவ உதவிகளை அளிக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால் அண்மையில் இந்தியாவின் ராணுவத் தளபதி தீபக் என்ன சொல்லியிருக்கிறார்? இலங்கைக்குக் கொடுக்கிற ஆயுதங்களின் பட்டியலை அவர் வரிசையாகப் படிக்கிறார். நாங்கள் தொடர்ந்து செய்வோம் இந்த உதவிகளை என்றும் சொல்கிறார். அப்படியானால் பிரதமர் சொன்னது பொய்யா? அல்லது பிரதமர் என்ன சொன்னாலும் நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டியவர்கள் என்று தீபக் நிரூபித்திருக்கிறாரா? ஆக இவர்களுக்கு நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்று கூடத் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒரு ராணுவத் தளபதி, நாங்கள் இப்படி எல்லாம் செய்கிறோம். எதிர்காலத்திலும் செய்வோம், என்று சொல்வாரேயானால் அந்தப் பிரதமர் ராணுவத் தளபதி மீது நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். "நான் இப்படிச் சொல்கிறேன் நீங்கள் எப்படிக் கொடுத்தீர்கள், யாரைக்கேட்டு கொடுத்தீர்கள்?" என்று கேட்க வேண்டும். வாயையே திறக்கவில்லை பிரதமர். அப்படியானால் ஒன்று அவரும் இதற்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும் அல்லது அவருக்குத் தெரியாமல் நடந்ததை இவரால் தடுக்க முடியவில்லை என்பது உண்மையாக இருக்க வேண்டும்.

கேள்வி: இதே போன்றொரு சம்பவம் பா.ஜ. ஆட்சியில் இருந்தபோது ராணுவ மந்திரியாக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ்க்கும் அவருடைய கடற்படை தளபதிக்கும் இடையில் ஏற்பட்டதே அந்த சந்தர்ப்பத்தில் கடற்படைத் தளபதியை அவர் வீட்டுக்கு அனுப்பியதும் அதனால் அவர் சம்பவித்த கஷ்டங்களை பற்றியும் உங்கள் கருத்தென்ன?

கடற்படைத் தளபதிக்கும் அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்களுக்கும் மோதல் என்பது பல்வேறு பிரச்சினைகளில் வந்துவிட்டது. உதாரணமாக, இந்தியக் கடற்படை இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட படை. ஆனால் இலங்கையைச் சுற்றி அது பாதுகாத்தது. ஜார்ஜ் பெர்ணான்டஸ் பதவி ஏற்றபோது அதை நிறுத்தினார். நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது தான் நமது வேலையே தவிர அண்டை நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது நமது வேலையல்ல என்று நிறுத்திவிட்டார். இந்தக் கடற்படைத் தளபதி அதைக் கண்டித்தார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் இப்படி செய்கிறார் என்று குற்றம் சாட்டினார். உடனடியாக அவரைப் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்தார் ஜார்ஜ் பெர்ணான்டஸ், பதவியிலிருந்து நீக்கக்கூடிய துணிவு அவருக்கு இருந்தது. அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வீட்டுக்கு அனுப்பினார். அவர் வெளியே போய் ஏதேதோ கூச்சலிட்டுப் பார்த்தார் எதுவும் நடக்கவில்லை.

கேள்வி: இப்போது இந்திய மத்திய அரசு என்பது பெருமளவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்போடு இயங்குகிறது. எனவே இலங்கை விசயத்தில் மத்திய அரசு எடுக்கின்ற நிலைகள் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்றதா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தெரியாமலே நடைபெறுகின்றதா?

ஆதரவுடன்தான் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சரைப் பொறுத்தவரையில் இலங்கை இனப் பிரச்சினை பற்றி இந்திய அரசின் கொள்கை எதுவோ அதுதான் தன்னுடைய கொள்கை என்று ஒரு தடவை அல்ல பல தடவை சொல்லிவிட்டார். "இந்த இந்திய அரசை மீறி நான் ஒருபோதும் செயல்படமாட்டேன்" என்று அவர் சொல்லிவிட்டார். அவருக்குத் துணிவு இல்லை. இடதுசாரிக் கட்சிகளும் மன்மோகன் சிங்கிற்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவுடன் அணு உடன்பாடு செய்துகொண்ட போது அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் இந்த அரசை. "எங்கள் சம்மதம் இதற்குக் கிடையாது. மீறினால் ஆட்சியைக் கவிழ்ப்போம்" என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிரட்டி இந்திய அரசை அடிபணிய வைத்திருக்கிறார்கள். இடதுசாரிகளை மீறி இந்திய அரசு செயல்பட முடியவில்லை. அதேபோல இவரும் சொல்லியிருக்க வேண்டும். "இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது எங்களுடைய சொந்தப் பிரச்சினை. இந்தப் பிரச்சினையில் எங்களுடைய முடிவு என்னவோ அதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும்" என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இவர் "இந்திய அரசின் கொள்கை எதுவோ அதுவே எங்கள் கொள்கை" என்று சொல்கிறார். இதற்கு சொந்தக்காரணங்கள் தவிர வேறென்ன இருக்க முடியும்? தனது மகள் கனிமொழியை மத்திய அரசாங்கத்தில் அமைச்சராக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர் மகன் அழகிரி மீது தினகரன் தாக்குதல் வழக்கில் மூன்று கொலைக் குற்றங்கள் சுமத்தப்பட்டு இருக்கின்றன. அது சி.பி.ஐ. விசாரணையில் இருக்கிறது. இந்த விசாரணை தன் மகனுக்குச் சாதகமாக இருக்கவேண்டும் என்பது அவர் நோக்கமாக இருக்கிறது. இப்படி சொந்தக் காரணங்களுக்காக இந்திய அரசை எதிர்த்து எதுவும் பேசுவதற்கு அவர் தயங்குகிறார். தமிழ்நாட்டில், தமிழ்ச்செல்வன் இறந்தபோது அவருக்கு ஒரு அனுதாப அலை இயற்கையாகவே எழுந்தது. இந்த அலையில் இருந்து தான் விலகி நிற்கக்கூடாது. அம்பலப் பட்டுப் போவோம் என்பதற்காக இவர் தி.மு.க. தலைவர் என்ற முறையில் ஓர் கண்டன அறிக்கை கொடுத்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் பேருக்கு ஒரு கவிதை எழுதிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். ஆக இவர் நேரடியாக இந்திய அரசை எதிர்ப்பதற்குத் தயங்குகிறார். அதற்கு அடிப்படை சொந்தக் காரணங்கள் தானே தவிர வேறு காரணங்கள் அல்ல.


நன்றி : காலைக்கதிர் 24-11-07

Wednesday, January 2, 2008

இந்தியாவின் மறுபக்க வரலாற்று ஆவணம - இன்குலாப்

ஐயா பழ. நெடுமாறன் அவர்களுடைய மேற்கண்ட நூலைக் கொஞ்சம் தாமதமாகத்தான் படித்தேன். அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவில் எனக்குத் தரப்பட்ட படியில் முதல் அத்தியாயத்தின் சில பகுதிகள் அச்சிடப்படாமல் வெறுமையாய் இருந்தன. இதனால் முதல் அத்தியாயத்தைப் படிக்காமல் நூலுக்குள் நுழைவதற்கு ஒருவகையான மனத்தடை இருந்தது. எனினும் முதல் அத்தியாயத்தை விடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கத் தொடங்குமுன் இதற்குகொரு திறனாய்வு எழுதவேண்டும் என்ற சிந்தனை எல்லாம் இல்லை. இதனுடைய தலைப்புக்கு நூலாசிரியர் என்ன நியாயம் செய்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே இருந்தது. ஆனால் நூலின் பக்கத்திற்குள் படர்ந்தபோது, இது தலைப்பால் மட்டும் துணிவு கொண்ட நூலன்று-விரித்துச் சொல்கிற செய்தி களாலும் விளக்கங்களாலும் துணிவு கொண்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எனினும் நூலை வெறும் வாசிப்பாகவே செய்து முடித்தேன். முக்கியச் செய்திகள் எதையும் குறித்துக் கொள்ளவில்லை. நூலாசிரியர் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்ததோடு

நூலின் முதல் அத்தியாயத்தைப் படிக்கவில்லை என்பதையும் சொன்னேன். பின்னொரு சமயம் நூலாசிரியரைச் சந்தித்தபோது, நூல்குறித்துப் பேசினேன். அவர் வேறொரு படியைத் தந்து படித்துப் பார்க்கச் சொன்னார். மறுபடியும் நூலைத் தொடக்கத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இம்முறை குறிப்புகளோடு படிக்க ஆரம்பித்தேன். இரண்டாம் முறை வாசித்தது நூலின் பல்வேறு பகுதிகளை இன்னும் தெளிவுபடுத்தியது; படித்து முடித்தபின், எனக்குத்தோன்றியது, இந்த நூலை இந்தியத் துணைக் கண்டத்தின் மறுபக்க வரலாற்று ஆவண மாகப் பேணவேண்டும் என்பதுதான்.

இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய முனைவர் த. செயராமன் நூலின் கருத்துக்களை மிக அழகாக வகை தொகை செய்து, அவற்றின் மீது தமது கருத்துக்களை வைத்துள்ளார்.

எதிரும் புதிருமாகத் தோற்றம் தரும் காங்கிரசும், பா.ஜ.க.வும் இந்துத்துவத்தின் புரவலர்கள்தான் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துவதை எடுத்துக்காட்டிய திரு த. செயராமன்,

"தேசிய இனப் போராட்டங்கள் மேலும் கூர்மையடைவதால் காங்கிரசும், பா.ஜ.க.வும் இனி இணைந்து செயல்படும்" என வருங்கால அரசியல் போக்கை இந்நூல் முன்னறிவிக்கிறது" என்று சரியாகவே மதிப்பிடுகிறார்.

இந்து தேசியம் இந்திய தேசியமாக உருவாகிய கதையைப் பரந்த அளவில் எடுத்துக்காட்டும் நூலாசிரியர், தம்முடைய முன்னுரையில், தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் சமுதாய விடுதலை இயக்கங்களுக்கும் நடுவில் உள்ள வேறுபாட்டையும் சுட்டிக்காட்டுகிறார்.

"சுருக்கமாகச் சொன்னால் தேசியப் புரட்சியை உருவாக்க விழைந்தார்களே தவிரச் சமூகப் புரட்சியை அவர்கள் வரவேற்கவில்லை. இதன் காரணமாகச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் நாடு முழுவதிலும் வேறுபட்ட போக்குகள் காணப்பட்டன. "வெள்ளையரை விரட்ட அணிதிரள்வீர்" என்ற முழக்கத்துடன் களம் இறங்கிய பிற்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் இயக்கங்கள் மறுபுறமும் போராடின. சாதி ஏற்றத் தாழ்வு இல்லாத சமுதாயம் காணப் போராடிய சக்திகளை அரவணைத்துக் கொள்ள இந்திய தேசியவாதிகள் அடியோடு தவறிவிட்டனர்" (ப.13).

இதற்கான முதன்மையான காரணம், தேசிய விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் பார்ப்பனர்கள் அல்லது, பார்ப்பனிய மேலாண்மையை ஏற்றுக்கொண்டவர்கள். சமுதாய இயக்கங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், அல்லது பார்ப்பனிய மேலாண்மையை மறுத்தவர்கள், "இந்தியா காத்திருக்கிறது" என்ற நூலாசிரியர்கள் இதைப் போதிய விவரணங்களுடன் விளக்கியுள்ளனர்.

சிந்து சமவெளி நாகரிகத்தின் உரிமை குறித்த விவாதங்களோடு நூல் தொடங்குகிறது. சிந்து வெளியின் பூர்வ குடிகளாகிய திராவிடர்கள் எந்தச் சூழலில் ஆரியர்களை எதிர்கொண்டார்கள், எப்படிப்பட்ட உறவுகளைப் பேணினார்கள் என்பவை இன்னும் ஆய்வுக்குரிய செய்திகளாகவே உள்ளன. எனினும் சிந்து சமவெளி நாகரிகம் ஆரியர்களுடையது அன்று என்பதை விளக்க, போதுமான சான்றுகளை இந்நூல் தொகுத்துத் தருகிறது. வந்தேறிகளாகிய ஆரியர்களுடன் திராவிடர்கள் போரிட்டார்களா என்பதை விளக்கச் சான்றுகள் இல்லைதாம். ஆனால் வேதங்கள் குறிப்பிடும் தஸ்யூக்கள், அவர்களுடைய கோட்டைகளை அழித்தது என்ற செய்திகள், இச்சமவெளியின் உரிமை பற்றி நிகழ்ந்த போர்களாகலாம். இப்பகுதியில் குவிந்து கிடந்த வெட்டுக்காயங்களோடு கூடிய தொல் எலும்புக் கூடுகள் பற்றியச் செய்தியைச் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்தது நினைவுக்கு வருகிறது. ஆனால், இது ஆரிய -திராவிடப் பூசலின் விளைவாகக் காயமுற்று இறந்தோரின் உடலங்கள் என்று உறுதி செய்ய முடியாது என்றும் அச்செய்தி குறிப்பிட்டதும் நினைவில் நிற்கிறது. இந்நூலைப் படித்தபிறகு இப்பொழுதும் ஆரிய - திராவிடப் போர் நீடிப்பதை உணர முடிகிறது.

இன்று சிந்து சமவெளித் தரவுகளைத் தனக்கேற்ற வகையிலேயே ஆரியம் / பார்ப்பனியம் திரித்து விளக்கம் சொல்ல முனைகிறது. சிந்து சமவெளியின் பூர்வீக இனம் தான்தான் என்று வாதிடுகிறது. தனது ஆதிக்க நீட்டிப்புக்காகச் சிறுபான்மை இனங்களையும் மதங்களையும் பிறர் என்றும் அந்நியர் என்றும் முத்திரை குத்தத் தயங்காத பார்ப்பனியம் தன்னளவில் தான் பூர்வகுடி என்று நிறுவ முயல்கிறது. மூவாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் இந்தப் போராட்டம் கருத்தியல் தளத்தில் மட்டுமல்லாது கரத்தாலும் நீடித்துக் கொண்டிருப்பதை இந்நூலைப் படித்து முடித்த பின்பு உய்த்துணர முடியும்.

பழந்தமிழர் வாழ்வில் ஊடுருவிய பார்ப்பனியம், தமிழர்களின் வாழ்நெறிகள் அனைத்தையும் ஆரிய மயமாக்கியதை விரிவாகச் சொல்கிறது.. சமயம், வழிபாடு என்று ஊடுருவிய ஆரியம், அன்றாடம் விளிக்கும் பெயர்களைக்கூடத் தன் வயமாக்கிக்கொண்டதை விளக்குகிறார்கள். கடவுள் பெயர், ஊர்ப்பெயர் எல்லாம் சமஸ்கிருதமாயின. தமிழர் வைத்துக்கொள்ளும் பெயர்களில்கூட சாதிய இழிவு மரபு புகுந்ததைச் சொல்லிச் செல்கிறார்.

பெளத்தம், சமணம், ஆரிவகம் முத

லிய சமய இயக்கங்கள் தொடங்கி, அடிகளாரின் சமரச சன்மார்க்கம், வட இந்தியாவில் தோன்றிய சீர்திருத்த இயக்கங்கள், மகாராஷ்டிராவில் புலே, கேரளாவில் நாராயணகுரு, தமிழகத்தில் அய்யன்காளி, அயோத்திதாசப் பண்டிதர், பெரியாரின் சுயமரியாதை இயக்கம் என்பன போன்ற பல்வேறு இயக்கங்கள், இந்த வைதீகக் கொடுங்கோன்மையை எதிர்த்து எழுந்ததை விளக்குகிறார், எனினும், இவற்றின் சாரங்களை எல்லாம் புறந்தள்ள இவ்வியக்கங்களையே விழுங்கிய ஆரியத்தின் சூழ்ச்சித்திறனும் உரிய வகையில் அம்பலப்படுத்தப்படுகிறது.

இந்திய வரலாற்றாசிரியர்கள் நிறுவ முயலும் இந்திய தேசியம், பண்பாடு போன்றவை எல்லாம் அடிப்படையற்றவை என்பதை நூல் தெளிவுபடுத்துகிறது. சமகால வரலாற்றில், ஆங்கிலேய வல்லரசுக்கு எதிராக நடைபெற்ற விடுதலைப் போரைக்கூடப் பார்ப்பனியம் தனது நலன்களுக்கு ஏற்பவே தொடக்கத்தில் இருந்து வளைத்து வந்து தனதாக்கிக் கொண்ட மோசடியையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது. இந்திய மாயைகளுக்கு எதிரான ஒரு வரலாற்று விமர்சனம் இது. மறுபக்க வரலாறு என்றுதான் படித்து முடித்தபின் மதிப்பிடத் தோன்றியது.

உருவாகாத இந்தியத் தேசியத்தையும், உருவான இந்து பாசிசத்தையும், விரிவாகவும், அமைதியாகவும் இந்நூல் விளக்கிச் செல்வதால் ஒரு பரபரப்பு நடை தவிர்க்கப்பட்டு, நிதானமாகச் சிந்திக்கத் தூண்டும் ஒரு நடை பேணப்பட்டிருக்கிறது. அவசரமாகப் படிக்க முடியும் நூலன்று இது. ஆழ்ந்து பயில வேண்டியது. இதை அரசியல்வாதிகள், தமிழறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் அனைவரும் படித்து விவாதிக்க வேண்டியது அவசியம்.

உருவாகாத இந்திய தேசியத்துக்கு மறுதலையாக இயற்கை வழிப்பட்ட மொழிவழித் தேசியத்தை இந்நூல் இன்னும் விரிவாகப் பேசி இருக்க வேண்டும். பேசுகிறது. ஆனால் போதுமானதாய் இல்லை. காஷ்மீர் மக்களின் போராட்டம், காஷ்மீரிகளுக்கு இந்திய அரசு தந்த வாக்குறுதி, அம்மக்களுக்குச் செய்த மாறுபாடு, நாகலாந்து, மிசோராம், மணிப்பூர் மக்களின் தொடரும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் எல்லாம் விரிவாகச் சொல்லப்படவில்லை. ஒருவேளை நூலாசிரியர் தலைப்பின் கருவாகத் தேர்ந்துகொண்ட எல்லைக்குள் இந்நூல் பேசியவை போதும் என்று கருதினால், அதைக் குறைசொல்லல முடியாது எனில் நூலாசிரியருக்கு இப்போராட்டங்களை விளக்கி எழுதவேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை இந்நூல் கோருகிறது எனலாம். கிட்டத்தட்ட இந்நூல், நூலாசிரியரின் அயராத முயற்சிக்கும், விளக்கிச் சொல்லும் திறனுக்கும் எடுத்துக்காட்டு. "ஆற்றுவார் மேற்றே பொறை' என்பார் வள்ளுவர். இந்நூலுக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் நல்கும் வரவேற்பு, இன்னும் இதையொத்த நூல்களை ஆசிரியரிடமிருந்து பெற்றுத்தரும் என்று நம்பலாம்.

எது உண்மை? எது பொய்?

"புலிகள் ஊடுருவல் அறவே இல்லை" - தென் படைத்தளபதி "புலிகள் பொருட்களைக் கடத்துகிறார்கள்" -கியூ பிரிவு காவல்துறை எது உண்மை? எது பொய்? முதலமைச்சர் கலைஞரின் பதில் என்ன? - பழ. நெடுமாறன

தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இங்கிருந்து பல்வேறு பொருட் களை இலங்கைக்குக் கடத்தி வருகின்றனர் என்று அண்மையில் தமிழக கியூ பிரிவு காவல்துறை பலர்மீது வழக்குத் தொடுத் துள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளை இங்கிருந்து கடத்தியதாக பலர் மீது வழக்குப் போடப்பட்டது.

ஆனால் இந்திய இராணுவத்தின் தென்மண்டலத் தளபதியாக உள்ள லெப். - ஜெனரல் நோபுல் தம்புராசு முதலமைச்சர் கலைஞரை 12-12-07 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய பிறகு பின்வருமாறு அறிவித்துள்ளார்.

"தமிழகக் கடல் பகுதியை கடலோர காவல் படையும், கடற்படையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. விடுதலைப்புலிகளிடமிருந்து எத்தகைய அச்சுறுத்தலும் நமக்கு இல்லை. மாநில அரசும் போதுமான கண்காணிப்பைச் செலுத்தி வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. இந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்துவது குறித்துக் கடற்படை அதிகாரிகளுடன் பேசுவேன். இந்தியக் கடற்படையும் இலங்கை கடற்படையும் இணைந்து கூட்டுச் சுற்றுக் காவலில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. இலங்கையிலிருந்து அகதிகள் வந்து கொண்டுள்ளனர். இதனை மாநில அரசும் நாங்களும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே எந்தக் கட் டத்திலும் விடுதலைப்புலிகளின் ஊடுருவல் என்பது தமிழகத்தில் அறவே இல்லை" என்று கூறியுள்ளார்.

தென்பிராந்திய இந்தியப் படையின் தளபதி கூறுவது உண்மையா? அல்லது தமிழகக் காவல்துறையின் கியூ பிரிவு கூறுவது உண்மையா?-என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய நாட்டுக்குள் யாரும் ஊடுருவுவதைத் தடுக்கும் பொறுப்பு இந்தியப் படைக்கும், கடற்படைக்கும் உண்டு. தமிழகக் காவல்துறை அதைச் செய்ய முடியாது. அதற்கான அதிகாரமோ அல்லது வசதிகளோ அதற்குக் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் ஊடுருவிவிட்டதாகவும். தமிழகத்திலிருந்து படகு, மற்றும் பொருட்களை இலங்கைக்குக் கடத்திச் செல்வதாகவும் கியூ பிரிவு கூறி சிலரை அவ்வப்போது கைதுசெய்து வழக்குகள் தொடுத்து சிறையில் அடைத்து வருகிறது. அப்படியானால் இந்தியப் படையோ அல்லது கடற்படையோ, ஊடுருவலைத் தடுப்பதில் படுதோல்வி அடைந்துவிட்டன. எனவே அவர்களை மீறி தமிழ்நாட்டிற்குள் ஊடுருவிவிட்ட விடுதலைப்புலிகளை தாங்கள் சாமர்த்திய மாகப் பிடித்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை கியூ பிரிவு காவல்துறை உருவாக்குகிறது. அதாவது இந்தியப் படையும், கடற்படையும், திறனற்றவை என்பதுபோலவும் இவர்கள்தான் திறமை சாலிகள் என்பதுபோலவும் கியூ பிரிவு சொல்லாமல் சொல்கிறது. அதிலும் அண்மையில் அவர்கள் தொடுத்திருக்கிற ஒரு வழக்கு எவ்வளவு போலித்தனமானது என்பதை விவரம் அறிந்தவர்கள் அறிவார்கள்.

இலண்டனிலிருந்து கடாபி கருப்பையா என்பவர் பணம் அனுப்பி தமிழ்நாட்டில் படகு ஒன்றை வாங்கி இலங்கைக்கு கடத்துவதற்கு முயற்சி செய்ததாகவும் அதன் விளைவாக சிலரை கியூ பிரிவு காவல்துறை கைதுசெய்துள்ள தாகவும் பரபரப்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மீனவர்களின் படகுகள் சாதாரண மீன்பிடி படகுகளே. ஆனால் புலிகளின் கடற்பிரிவான கடற்புலிப்படையில் பீரங்கிப் படகுகளும், அதிவேகப் படகு களும் கப்பல்களும் உள்ளன. சிங்களக் கடற்படை அதனுடன் ஈடுகொடுக்க முடியா மல் திணறுகிறது. கடற்புலிகள் வலிமை வாய்ந்த அமைப்பாக உருவாகியுள்ளார்கள். அவர்களுக்குத் தேவையான படகுகளை அவர்களே உற்பத்தி செய்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து மீன்பிடி படகைக் கடத்தவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. இந்த உண்மையைக் கூடத் தெரியாமல் அல்லது அதை மறைத்து விட்டு இப்படியொரு பொய்யான வழக்கை கியூ பிரிவு காவல்துறை தொடுத்திருப்பது கேலிக்கூத்தாகும்.

பல மாதங்களுக்கு முன்னால் தமிழ்நாட்டிலிருந்து பால்ரஸ் குண்டுகளை கடத்தியதாகவும் அவற்றின் துணை கொண்டு விடுதலைப்புலிகள் குண்டுகள் தயார்செய்ய உதவியதாகவும் ஒரு வழக்கை கியூ பிரிவு தொடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளைக் கொண்டு வெடிகுண்டு செய்வது என்பது ஒருபோதும் இயலாத ஒன்றாகும். ஆனால் இந்த உண்மையை உணராத கியூ பிரிவினர் இப்படியொரு வழக்கை சோடித்ததின் மூலம் தங்கள் அறியாமையை வெளிப் படுத்திக்கொண்டுள்ளனர்.

கொழும்பில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய கடைவீதி உள்ளது. அந்த வீதி நெடுகிலும் சைக்கிள் உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் உள்ளன. இலங்கையில் சைக்கிளோ, அதனுடைய உதிரிபாகங் களோ உற்பத்தி செய்யப்படுவதில்லை. இந்தியாவிலிருந்து பிற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தக் கடைகளுக்கு வரும் உதிரிபாகங்கள் பெரும்பாலானவை கடத்தல் மூலமே வருகின்றன. இந்த உண்மை இந்திய சுங்க அதிகாரிகளுக்கும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும் தெரியும். இந்தக் கடத்தல் இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுங்க அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் கையூட்டு அளிப்பதின் மூலமே இந்தப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

இது அனைவரும் அறிந்த உண்மையாகும். ஆனாலும் மிகப்பெரிய சதியைக் கண்டுபிடித்துவிட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை இந்த வழக்குகளின் மூலம் கியூ பிரிவு உருவாக்க முயலுகிறது. இந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிற்கப் போவதில்லை. ஆனாலும் கைதுசெய்யப் பட்டவர்கள் பல மாதங்கள் சிறையில்வாட வேண்டி வரும். இறுதியில் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். அப்படி யானால் இத்தகைய பொய்யான வழக்குகள் எதற்காகத் தொடுக்கப்படுகின்றன என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைவிதித்துள்ளது. இரண்டாண்டுக்கு ஒருமுறை அந்தத் தடையைப் புதுப்பித்து வருகிறது. ஒவ்வொரு தடவையும் தடை நீட்டிக்கப் படுவதற்கு சிறப்பு நீதிமன்றம் ஒன்றின்முன் இந்திய அரசு மனு செய்யும். அப்போது விடுதலைப்புலிகள் தொடர்ந்து சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அதற்கான ஆதாரங் களை அளிக்கவேண்டும். இந்த நோக்கத் துடன்தான் மேற்கண்ட வழக்குகளை கியூ பிரிவு பொய்யாக சோடிக்கிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் இந்தத் தடையை நீட்டிக்கவேண்டிய அவசியம் உள்ளது. அதற்காகவே அவசரம் அவசரமாக இது போன்ற பொய்யான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

இத்தகைய பொய்வழக்குகளினால் விடுதலைப்புலிகளையோ அல்லது அவர்களுக்கு ஆதரவாக இங்கு செயல் படும் அமைப்புகளையோ மிரட்டிவிட முடியாது. அந்த நோக்கத்துடன் தொடுக்கப் படும் இந்த வழக்குகள் நேர் எதிர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன என்பதைத் தமிழக அரசு உணரவேண்டும். இந்த வழக்குகளைச் சுட்டிக்காட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தி.மு.க. அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முற்படுகிறார். கியூ பிரிவு தொடுத்துள்ள வழக்குகளை தி.மு.க அரசுக்கு எதிரான கணைகளாக அவர் ஏவுகிறார். இதற்கு கியூ பிரிவு உதவி செய்கிறது என்பதை முதலமைச்சர் கலைஞர் உணரவேண்டும்.

தமிழ்நாட்டில் கியூ பிரிவு என்பது தமிழகக் காவல்துறைத் தலைவரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குவதாகும். தமிழகக் காவல்துறையோ முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ஆனால் உண்மையில் மத்திய உளவுத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில்தான் கியூ பிரிவு இயங்குவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன. மத்திய உளவுத் துறையின் ஆணையின்படியே இத்தகைய பொய்வழக்குகளை கியூ பிரிவு தொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்துவரும் தமிழக முதலமைச்சர் கலைஞர் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கியூ பிரிவு காவல்துறையின்மீது மத்திய உளவுத்துறை ஆதிக்கம் செலுத்தி ஆட் டிப்படைப்பதை எவ்வாறு அனுமதிக் கிறார்? அதைத் தடுத்து நிறுத்தும் சக்தி அவருக்கு இல்லையா? இந்தப்போக்கு நீடிப்பது என்பது அவருக்கும் நல்லதல்ல தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல. மாறாக அவருக்கு எதிராகச் செயல்படும் செல்வி ஜெயலலிதாவுக்கே இது உதவும் என்பதை முதலமைச்சர் உணரவேண்டும்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகவும் அவர் களைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் இத்தகைய பொய்யான வழக்குகளைத் தொடுப்பது என்பது சிங்கள இன வெறி யாட்சியை ஊக்குவிக்கும் செயலாகும்.

வங்காள தேச விடுதலைப் போராட்டம் நடைபெற்றபோது. முக்தி வாகினி படையினர் மேற்குவங்காளம், திரிபுரா, அசாம் போன்ற இந்திய மாநிலங் களின் எல்லைக்குள் தங்களின் முகாம் களை அமைத்துக் கொண்டு அங்கிருந்து வங்க தேசத்திற்குள் ஊடுருவி பாகிஸ்தான் படையினரைத் தாக்கியழித்துவிட்டு திரும்பவும் பத்திரமாக இந்திய எல்லைக் குத் திரும்பி வந்தனர். அவர்களை பாகிஸ்தான் படையினர் விரட்டிவந்தால் எல்லையில் உள்ள இந்தியப் படையினர் அவர்களைச் சுட்டு விரட்டியடித்தனர்.

ஆனால் விடுதலைப்புலிகள் தமிழ் நாட்டிற்குள் முகாம்கள் எதுவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை. இங்கிருந்து சென்று சிங்களப் படையைத் தாக்கவும் இல்லை. தங்கள் மண்ணில் பெரும் பகுதியை மீட்டு சுதந்திர பூமியாக்கி அதில்தான் தங்களது முகாம்களை அமைத்துக்கொண்டுள்ளனர். தங்கள் மண்ணில் இருந்துகொண்டுதான் சிங்களப் படையை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான ஆயுதங் களை உலகச்சந்தையில் இருந்து வாங்கு கின்றனர். எதிரியிடம் போராடி அவனது ஆயுதங்களைப் பறிக்கின்றனர். இந்தியாவி லிருந்து ஒருபோதும் ஆயுதங்களைக் கடத்துவது இல்லை. கடத்துவதற்கு தமிழ்நாட்டில் ஆயுதங்களும் விற்கப்படு வது இல்லை. அப்பட்டமான இந்த உண் மைகளை கொஞ்சமும் புரிந்து கொள்ளாது விடுதலைப்புலிகளைத் தொடர்ந்து கொச்சைப்படுத்துவது மிகக் கேவலமானதாகும்.

கியூ பிரிவு காவல்துறையினர் தொடுத்துள்ள வழக்குகளின் மூலம் கீழ்க்கண்ட அய்யங்கள் எழுந்துள்ளன. அவற்றை நீக்கவேண்டிய கடமை முதலமைச்சர் கலைஞருக்கு உண்டு,.

1. இந்தியக் கடல் எல்லையைப் பாதுகாத்து புலிகளின் ஊடுருவலைத் தடுக்கக் கடற்படையும், இராணுவமும் அடியோடு தவறிவிட்டனவா?

2. தமிழ்நாட்டில் நவீனப்போருக்குத் தேவையான ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றதா? விற்கப்படுகின்றதா?

3. தமிழக காவல்துறையின் செயற் பாடுகளை மத்திய உளவுத்துறை கண்காணித்துக் கட்டுப்படுத்துகிறதா?

மேற்கண்ட கேள்விகளுக்கு இல்லை என்பது பதிலானால் கியூ பிரிவு தொடுத்துள்ள வழக்குகள் பொய்யானவை என்பதை முதலமைச்சர் ஏற்கவேண்டி யிருக்கும். அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறிய தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.