Monday, June 23, 2008

அமேரிக்க! ஓநாய் மீண்டும் உறுமுகிறது - பழ.நெடுமாறன்

இந்தியாவின் மீது அமெரிக்கா மீண்டும் பாய்ந்துள்ளது. இந்தியாவிலிருந்து சாதாரக அரிசி மற்றும் சில உணவுப் பொருள்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



இதைக்கண்டு அமெரிக்கா ஆத்திரம் அடைந்துள்ளது. அமெரிக்க உயர் அதிகாரியான கிரிஸ்டோபர் பாடில்லா என்பவர் “அரிசி உள்ளிட்ட உணவு தானியப் பொருள்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், அண்டைய நாடுகளில் கடும் உணவு தட்டுப்பாட்டை உண்டாக்கி விலை உயர்வுக்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளனர்.



அமெரிக்காவின் கோபத்திற்கு உண்மையான காரணம் வேறு. அரிசியை ஒரு போதும் அமெரிக்கர்கள் உபயோகிப் பதில்லை. அமெரிக்காவில் வாழும் இந்தி யர்களும் பிற ஆசிய ஆப்பிரிக்க மக் களும் உயர்ரக அரிசிகளையே உண்ணுகி ன்றனர். அவர்களும் சாதாரக அரிசியை ஒரு போதும் பயன்படுத்துவது இல்லை.



இந்தியா அரிசி உற்பத்தியில் உலகில் 2வது இடத்தில் உள்ளது. கோதுமை, உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும், மக்காச் சோள உற்பத்தியில் ஏழாவது இடத்திலும் உள்ளது. அமெரிக் காவுக்கு அரிசியோ, கோதுமையோ வேண்டியதில்லை. பின் எதற்காக அமெரிக்கா இந்தியாவின் மீது பாய்கிறது?



இந்தியாவில் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் சாதாரக அரிசியை யும், சோளத்தையும் இதர புன்செய் தானியங்களையுமே உணவுக்காகப் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களுக்குத் தேவையான மேற்கண்ட தானியங்களின் ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்திருப்பது நியாயமானது மட்டுமல்ல. தன் மக்களின் நலனை கருத்தில் கொண்டதுமாகும்.



இதை கண்டிக்கும் தகுதி அமெரிக்காவிற்கோ வேறு எந்த நாட்டிற்கோ கிடையாது. ஒவ்வொரு நாடும் அதன் மக்களின் நலனை மனதில் கொண்டே செயல்படுகின்றன.



1960களில் உலகெங்கும் பல நாடுகளில் கடுமையான கோதுமைப் பஞ்சம் ஏற்பட்ட போது இதே அமெரிக்கா கோதுமை விலையை உயர்த்துவதற்காக கோடிக்கணக்கான டன்கள் கோதுமையை கடலில் கொட்டி வீணாக்கியது. அந்த அமெரிக்கா இப்போது இந்தியர்களின் பசியைத் தீர்க்கும் நடவடிக்கையில் இந்தியா இறங்கி இருப்பதைக் கண்டித்திருக்கிறது.



அமெரிக்காவின் உண்மையான நோக்கம் அரிசி ஏற்றுமதி தடையைப் பற்றியல்ல. இந்தியாவில் ஏராளமாக விளையும் சோளம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டதனால் சோளம் கிடைக்காமல் போய்விடுமே என அமெரிக்கா கவலைப்படுகிறது. அமெரிக்க மக்களின் உணவுக்காக இந்திய சோளம் தேவைப்படுமானால் அம்மக்களின் பசி தீர்க்க அதை நாம் அனுப்பலாம். ஆனால் எத்தனால் தயாரிப்பதற்காக சோளம் அமெரிக்கா வுக்குத் தேவைப்படுகிறது.



அமெரிக்காவில் சோளம், புஷல், கணக்கில் அளக்கப்படுகிறது. ஒரு புஷல் என்பது 25.4 கிலோ கிராம்கள் ஆகும். ஒரு புஷல் சோளத்திலிருந்து 11.37 லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.



அமெரிக்காவில் தனி நபர் ஒருவருக்கு மாதந்தோறும் 63.27 கிலோ கிராம் அல்லது 139.5 பவுண்ட் சோளம் தேவைப்படுகிறது. ஆனால் இந்தியா வில் தனி நபருக்கு ஆண்டுக்கு 29 பவுண்டு சோளம் தேவைப்படுகிறது.



அமெரிக்காவில் எத்தனால் மூலம் ஓடும் செவர்லட் காரின் டேங்க் 90.4 லிட்டர் கொள்ளும். இதற்குத் தேவையான எத்தனாலை உற்பத்தி செய்ய 203.2 கிலோ கிராம் சோளம் தேவை.



அதாவது 203.2 கிலோ கிராம் அளவு சோளத்தை ஒரு அமெரிக்கர் 3.2 மாதங்களுக்கு உண்ணலாம். அதே அளவு சோளத்தை இந்தியர் ஒருவர் 15 ஆண்டுகளுக்கு மேல் உண்ணலாம்.



அமெரிக்காவின் ஆத்திரத்திற்கு காரணம் என்ன என்பது இப்போதுப் புரிகிறதா? பெட்ரோல், டீசல் ஆகிய வற்றின் விலை உயர்வினால் அமெரிக் கர்கள் தங்களது வாகனங்களுக்கு எத்தனாலைப் பயன்படுத்தி வருகிறார் கள். அதற்கு சோளம் நிறைய தேவை.



ஏற்றுமதித் தடையின் காரணமாக இந்திய சோளம் அமெரிக்காவுக்கு கிடைக்க வழியில்லை. எனவே இந்தியாவை நோக்கி அமெரிக்க ஓநாய் மறுபடியும் உறுமுகிறது.



தன் கண்ணில் உள்ள உத்தி ரத்தை எடுத்து விட்டு அடுத்தவர் கண் ணில் உள்ள துரும்பை அகற்ற வேண் டும் என இயேசுபிரான் கூறினார். இயே சுவைப் பின்பற்றுவதாகக் கூறும் அமெ ரிக்கா அவரது அறிவுரையைப் புறக்கணிக்கிறது.



சர்வதேச வணிக – பொருளா தார மய்யத்தின் செயலாளர் நாயகமான பிரதீப் எஸ்மேத்தா என்பவர் பின் வருமாறு கூறியுள்ளது சிந்திக்கத் தக்கதாகும்.



நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இந்தியர்களின் உடல் எடையைப் போல அமெரிக்கர்கள் தங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்வார்களானால் ஆப்பிரிக்காவில் உள்ள கோடான கோடி பசித்த மக்கள் தங்களுக்குத் தேவையான உணவைச் சிறிதளவாவது பெறுவார்கள். தங்கள் உடம்பில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதற்காக அமெரிக் கர்கள் செலவிடும் பணத்தை பசியால் வாடும் மக்களுக்கு அளிப்பார்களானால் ஏராளமானவர்கள் பசியாறுவார்கள். என்றும் கூறியுள்ளார்.



உணவு தானிய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையினால் உலகில் உணவுப் பொருட்களின் விலை உயரும் என அமெரிக்காக் கூறுவது வெறும் பிதற்றலாகும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிலும் ‘எத்தனால், மற்றும் உயிரி எரிபொருள் தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் சோளம் போன்ற தானியங் களை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகள் தூண்டப்பட்டு அதற்காக ஏராளமான மானியமும் அளிக்கப்படுகிறது.



இதனால் அந்நாடுகளை சேர்ந்த விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியை நிறுத்தி விட்டு உயிரி எரிபொருள் உற்பத்திக்குத் தேவையான தானியங்களைப் பயிரிடுகிறார்கள். இதன் காரணமாகவும் அமெரிக்காவும் அய்ரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ள வணிகத் தடைகளின் காரணமாகவும் உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை ஏறியிருக்கிறது என்பதுதான் உண்மை யாகும். இதை மறைப்பதற்கு அமெரிக்கா இந்தியாவின் மீதும் மற்றும் வளரும் நாடு களின் மீதும் வீண் பழியை சுமத்துகிறது. வளரும் நாடுகள் மேலும் மேலும் வளர்ச்சிப் பாதையில், செல்வதுவும் அவர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகமாவதும் புதிய அரசியல் இலக் கணம் ஆகும். அதைத் தடுக்க யாராலும் முடியாது.

Sunday, June 15, 2008

உலகத் தமிழர் பேரமைப்பு இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்புத் தோற்றம்

உலகத் தமிழர் பேரமைப்பில் இணைந்த தமிழ்ச் சங்கங்களின் கூட்டம் 24-05-08 அன்று திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் அ. பத்மனாபன், மா.செ. தமிழ்மணி, பேரா. மருதமுத்து, சின்னப்பத் தமிழர், தம்பி பழனிச்சாமி, தங்கதுரை, இளங்கண்ணன், க. சச்சிதானந்தன், செங்கொடி, பரணன், காமராசன், அசோக்குமார், முத்து, நிலவழகன், அரணமுறுவல் உட்பட பலர் உரையாற்றினர்.

இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு இக் கூட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக மறவன்புலவு க. சச்சிதானந் தம், துணைத் தலைவர்களாக புலவர் க. சுப்பிரமணியம் (கர்நாடகம்) மு. முத்துராமன் (கேரளா) ஆ. நெடுஞ்சேரலாதன், மா.செ. தமிழ்மணி பொதுச்செயலாளர்களாக தி. அழகிரிசாமி, அரணமுறுவல், பொருளாளராக பொன்னிறைவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக வ. வேம்பையன், மரு. வே. குழந்தைவேலு, நாக.இரகுபதி, திருமதி. தமித்தலெட்சுமி, தம்பி பழனிச்சாமி, ந.மு. தமிழ்மணி, பேரா. அறிவரசன், சின்னப்ப தமிழர், சி. தங்கதுரை, முத்துச்செல்வன், ஆ. கருப்பையா, திருமதி. அ. செங்கொடி, மு.வ. பரணன், மரு. பழனிச்சாமி, சக்தி காமராசன், நிலவழகன், இரா. சோ. ராமசாமி, தமிழ்வேங்கை, வேலுமணி ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. அயலகத் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு

உலகெங்கும் வாழும் எட்டுகோடி தமிழர்களில் 2 கோடி பேர் தமிழ்நாடு தவிர்த்த பிற மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகிறார்கள். அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்நாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக்காடு இடங்களையும் வேலை வாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்குவதோடு. இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் 5 விழுக் காட்டு இடங்களையும் வேலைவாய்ப்பில் 5 விழுக்காட்டு இடங்களையும் ஒதுக்கித் தமிழர்களின் தாயகம் தமிழ்நாடு என்பதை உறுதி செய்ய வேண்டுமாய்த் தமிழக அரசை இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

2. பிறமாநிலங்களில் இடஒதுக்கீடு

மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகியவை பிரிந்தபோது அந்தந்த மாநிலங்களில் உள்ள சாதி வாரிப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தமிழர்களின் சாதிப்பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் பழைய ஒன்றுபட்ட சென்னை மாகாண சாதிப்பட்டியல் அப்படியே வைக்கப்பெற்று இல்லாத சாதிகளுக்கும் கல்வியிலும் வேலையிலும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்களை அந்தந்த மாநிலங்களிலுள்ள பட்டியலில் சேர்த்துக்கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாட்டரசு நடவடிக்கை மேற்கொள்ள இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


3. ஈழத்தமிழ் அகதிகள்

ஐ.நா. பேரவையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஐ.நா. அகதிகள் ஆணையம் உலகநாடுகளில் உள்ள அகதிகளுக்குச் செய்யவேண்டிய உதவிகள் அனைத்தையும் செய்து வருகிறது. இந்த ஆணையப் பட்டயத்தை ஏற்று பல்வேறு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியா இன்னும் ஏற்றுக் கையொப்பம் இடவில்லை. இதனால் இலங்கையிலிருந்து வந்து தமிழ் அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் உதவமுடிய வில்லை. இந்திய அரசு அகதிகள் ஆணையத்தை ஏற்றுக்கொள்வதுடன் இலங்கை அகதிகளுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் வழங்கும் உதவிகளைப் பெற்றுத் தர செய்ய வேண்டும் என்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

4. பிறமாநிலத்தவர்களுக்கு தமிழ்வழிக்கல்வி

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, உருது, மராட்டி போன்ற மொழிபேசும் சிறுபான்மையினர் தங்களுக்குரிய கல்வி, வேலைவாய்ப்பு கலை, பண்பாடு உள்ளிட்ட அனைத்து வாழ்வியல் உரிமைகளையும் தாராளமாகப் பெற்றுவரும் அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள எந்த உரிமையையும் அனுபவிக்க முடியாமல் அல்லலுறுகிறார்கள். தாய்மொழியில் கற்கும் அடிப்படை உரிமையைக் கூட பெறமுடியாமல் உள்ளார்கள். இந்தியாவின் பிறமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் மொழிச் சிறுபான்மையினருக்கான உரிமைகளை வழங்க இந்திய அரசு ஏற்பாடு செய்வதுடன் அதைக் கண் காணிக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.

5. உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ்

இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்துள்ள இந்த நேரத்தில் உலகெங்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் தமிழ்மொழிக்கு ஆய்வு இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப்பட்ட, மேற்பட்ட, ஆய்வுப்பட்ட மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டுமென்று இந்திய அரசை இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.

6. தமிழக மீனவர்கள் நிலை

இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசுக்குத் தாரை வார்த்ததின் காரணமாகத் தமிழக மீனவர்களின் வாழ்வுரிமை பறிபோய்விட்டது. அன்றாடம் கைது, வலைபறிப்பு, கொலை என்று மீனவர்கள் சீரழிந்து கொண்டுள்ளார்கள். தமிழக மீனவர்களை தனது குடிமக்கள் என்று இந்திய அரசு கொஞ்சமும் கருதிப்பார்க்காமல் தொடர்ந்து இலங்கை அரசின் ஆணவப் போக்கிற்குத் துணைபோய்க் கொண்டுள்ளது. இந்திய அரசு இலங்கைக்குச் செய்துவரும் எல்லா உதவிகளையும் நிறுத்திவிட்டு இலங்கை அரசை எச்சரிக்கை செய்வதுடன் கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்குள்ள உரிமையை நிலைநாட்டத் துணை நிற்க வேண்டுமென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக்கொள்கிறது.


7. தமிழ்வழிப் பள்ளிகளுக்கு ஆதரவு

தமிழ்நாட்டில் தமிழக அரசு மக்கள் தொகைப் பெருக்கத்துக்கேற்பத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்க வில்லை. கல்வி வழங்கும் உரிமையை தனியார்களிடம் விட்டதின் விளைவாக அவர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளையடித்து வருகிறார்கள். ஆனால் தமிழக அரசு செய்யவேண்டிய பணியைச் செய்துவரும்-தமிழ்வழிப் பள்ளிகளை நடத்திவரும் தமிழர்களை ஊக்குவிப் பதற்கு மாறாக அரசு தொல்லைகொடுத்து வருகிறது. தமிழ்வழிப் பள்ளிகளை நடத்திவரும் தமிழர்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவிசெய்யவேண்டு மென்று இந்திய-இலங்கைத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டிக் கொள்கிறது.