Thursday, January 22, 2009





விழுப்புரத்தில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

இலங்கையில் நாள்தோறும் அப்பாவிதமிழர்கள்மீது சிங்கள அரசு குண்டுமழை பொழிந்து கொன்று குவித்துவருகிறது தமிழக சட்டமன்றத்திலே அனைத்துகட்சிகளும் போரை நிறுத்தவலியுறுத்தி தீர்மானம் போட்டும் தமிழகத்திலே அனத்துகட்சிகளும் மனித சங்கிலி,உண்ணாவிரதம் ,கண்டனஆர்ப்பாட்டங்கள் ந்டத்தியும் திருமாவளவன்போன்றோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் இந்திய அரசின் பதில் திருப்தி அளிககாதநிலையில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வகுப்புகளை புறக்கணிப்பது என்று முடிவுசெய்து இன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் 2000ம் பேர் வகுப்புகளை புறக்கணித்தனர் மேலும் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள்,சுமார் 700க்கும் மேற்பட்டவர்களும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள் சுமார் 600க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய வகுப்புகளை இன்று புறக்கணித்தனர் நாளையும் இந்தபோராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்


விழுப்புரம் ஜோதிநரசிம்மன்



விருதாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலங்கையிலே அப்பாவிதமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுருத்தி வகுப்புகளை புறக்கணித்து பேரணி நடத்தினர்

0 comments: