Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Friday, January 23, 2009

சட்டக் கல்லூரி சாகும் வரை பட்டினிப் போராட்டம்

ஈழ மக்களின் துயரை நீக்கக் கோரி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் நேற்று முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர். செங்கல்பட்டு சட்டக் கல்லூரி வாசலில் நடக்கும் இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் :

1. கெம்ப குமார் - தொடர்பு எண் : 92455-81684
2. திருமுருன்
3. விஜயகுமார்
4. மணிவேல்
5. பிரவீன்
6. சுரேஷ்
7. ராஜா
8. ராஜ்குமார்
9. முஜிபுர் ரகுமான்
10. முனிஷ் குமார்
11. நவீன்
12. பிரியன்
13. பிரபு
14. ஆறுமுக நயினார்

திரு. கெம்ப குமாரிடம் பேசிய போது, 'ஈழத்தில் துன்புறும் தமிழ் மக்களுக்கு இந்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உதவ வேண்டும். இந்திய அரசு சிங்கள அரசுக்கு செய்யும் உதவிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை நாங்கள் உறுதியாகத் தொடருவோம். எங்களை கைது செய்தாலும் சிறையிலும் எங்கள் உண்ணாவிரதம் தொடரும்' என்று உறுதியோடு கூறினார்.

Update 1:

நேற்று (23 ஜனவரி 2009) மாலை முதல் மேலும் 3 மாணவர்கள் போராட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் பெயர் வருமாறு :
15. அன்பரசு தொடர்பு எண் : 98940-45451
16. சரவணன்
17. கே. சி. ராஜா

Update 2:-
நான்கு நாட்களாக பட்டினி போராட்டத்தில் இருக்கும் 17 மாணவர்களில் 5 பேர் இன்று(24 ஜனவரி 2009) இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

Thursday, January 22, 2009





விழுப்புரத்தில் இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்து, மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

இலங்கையில் நாள்தோறும் அப்பாவிதமிழர்கள்மீது சிங்கள அரசு குண்டுமழை பொழிந்து கொன்று குவித்துவருகிறது தமிழக சட்டமன்றத்திலே அனைத்துகட்சிகளும் போரை நிறுத்தவலியுறுத்தி தீர்மானம் போட்டும் தமிழகத்திலே அனத்துகட்சிகளும் மனித சங்கிலி,உண்ணாவிரதம் ,கண்டனஆர்ப்பாட்டங்கள் ந்டத்தியும் திருமாவளவன்போன்றோர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் இந்திய அரசின் பதில் திருப்தி அளிககாதநிலையில் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வகுப்புகளை புறக்கணிப்பது என்று முடிவுசெய்து இன்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள் சுமார் 2000ம் பேர் வகுப்புகளை புறக்கணித்தனர் மேலும் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி மாணவ,மாணவிகள்,சுமார் 700க்கும் மேற்பட்டவர்களும் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவியர்கள் சுமார் 600க்கும் மேற்ப்பட்டவர்கள் தங்களுடைய வகுப்புகளை இன்று புறக்கணித்தனர் நாளையும் இந்தபோராட்டம் தொடரும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்


விழுப்புரம் ஜோதிநரசிம்மன்



விருதாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இலங்கையிலே அப்பாவிதமிழர்கள் மீதான போரை நிறுத்த வலியுருத்தி வகுப்புகளை புறக்கணித்து பேரணி நடத்தினர்