Showing posts with label தீகுளிப்பு. Show all posts
Showing posts with label தீகுளிப்பு. Show all posts

Wednesday, January 28, 2009

ஈழத்திற்காக தன்னையே எரியூட்டிக் கொண்ட இளம் பத்திரிகையாளர்

முத்துக்குமார் என்ற இளம் பத்திரிகையாளர், இன்று காலை சென்னையில் உள்ள இந்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு தன்னை எரியூட்டிக் கொண்டார்.

ஈழச் சிக்கலில் இந்திய அரசின் நிலைப்பாட்டினை கண்டித்து முழக்கம் எழுப்பிய அவர்.. அதற்காக இந்திய அரசைக் கண்டித்து தான் தற்கொலை செய்வதாக முழக்கமிட்டுக் கொண்டே.. தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொண்டார்.
75 விழுக்காடு தீப்புண்கள் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு மிக ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.