Saturday, May 17, 2008

புலிகளுக்கு எதிராக இந்தியா! பகத்சிங்கின் குடும்பத்தினர் எதிர்ப்பு

இந்தியாவின் மிகவும் ஈர்க்கப்பட்ட விடுதலை வீரரான பகத்சிங்கின் குடும்பத்தினர் இந்திய இராணுவம் இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.

பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங் ஆவார். இவரது மகன் மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அண்மையில் இதை ஒப்புக் கொண்டுள்ளார். இந்திய இராணுவ அதிகாரியாக தான் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டதை எனது தந்தை விரும்பவில்லை. 'எனது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் இந்தியாவின் இந்த நடவடிக்கையை நியாயத்திற்காக போராடும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே கருதினர்' என்கிறார் அவர்.

யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கு எதிரான போரில் சிறந்த பணி புரிந்தமைக்காக மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் விழாவிற்கு அவரது தந்தை வர மறுத்துவிட்டார். 'அங்கீகரிக்கப்படாமலே போய்விட்ட பெரும் தியாகங்களை புரிந்தவர் களுக்கு எதிராக தன் மகன் போரிட்டதற்காக கெளரவிக்கப் படுவதை என் தந்தையால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்கிறார் அவர்.

பிரிட்டிசாரிடமிருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்தே ஈழத் தமிழர்கள் இந்திய விடுதலை வீரர்கள் மீது பெரும் பற்றுக் கொண்டிருந்தனர். அவர்கள் வீடுகளில் இந்திய விடுதலை வீரர்களின் படங்கள் மாட்டப் பட்டிருக்கும்.

கர்னல் கிட்டுவின் தந்தை ஒரு காந்தியவாதி. தன் மூத்த மகனுக்கு காந்தி என்றே பெயரிட்டார். அவர் வீட்டில் காந்தி, நேரு, திலகர் ஆகிய இந்திய தலைவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கிட்டு தன் பங்கிற்கு பகத்சிங்கின் படத்தையும் மாட்டினார். தளபதி பண்டிதரின் வீட்டில் பகத்சிங், நேதாஜி ஆகியோரின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 1980களில் 'சண்டே' ஆங்கில இதழுக்கு அளித்த நேர்காணலில், தன்னை மிகவும் கவர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்களில் பகத்சிங்கை முதன்மைப் படுத்தி கூறியிருந்தார். அத்தோடு நேதாஜியையும் குறிப்பிட்டிருந்தார்.

இன்றளவிலும் பாரதியின் 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' போன்ற விடுதலைப் பாடல்கள் ஈழத்தில் பாடப்படுகின்றன. பழ. நெடுமாறன் அவர்கள் ஈழத்தில் செய்த முதல் சுற்றுப்பயணத்தின் ஒளிப்படத்திற்கு பிரபாகரன் 'சுதந்திர தாகம்' என்றே பெயரிட்டார். இந்த குறிப்பிட்ட பாடலின் அடிப்படையிலேயே 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்ற முழக்கம் அமைக்கப்பட்டது.

இந்த அளவிற்கு இந்திய விடுதலை வீரர்களை நேசித்த, தங்களவர்களாக நினைத்த ஈழத்தமிழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் தான் இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. அதிலும் "உலகில் எந்த மூலையில் சுதந்திரப் போராட்டம் நடந்தாலும் அதனை ஆதரிப்பதே எங்கள் வெளியுறவுக் கொள்கை" என பிரதமராக தனது முதல் உரையிலேயே அறிவித்த ஜவகர்லால் நேருவின் பேரன் இராஜீவ் காந்தியின் காலத்தில் ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டது மிகக் கொடுமையானது.

விடுதலை வேட்கை கொண்ட ஒவ்வொருவரும், மானுட விடுதலையை வேண்டும் ஒவ்வொருவரும், உலகில் எங்கு விடுதலைப் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவாகவே நிற்பார்கள் என்பதற்கு பகத்சிங்கின் குடும்பத்தினரே சான்று.

தென்செய்திக்காக பூங்குழலி

2 comments:

Anonymous said...

There is a difference between Tamils of Sri Lanka and LTTE. LTTE is as much a fascist organization as the Sri Lankar army. If only they had accepted Rajiv Gandhi's proposal and gone in for democratic elections, to let the Tamils of Sri Lanka choose for themselves, they would have become real heroes. But what happened? In the name of fighting the Sinhalese Army, they also exterminated all other rival groups.

Just look at what happened in Nepal. The Maoists have now accepted democracy and are on the way to becoming globally accepted. The same applies to LTTE also.

said...

//Just look at what happened in Nepal. The Maoists have now accepted democracy and are on the way to becoming globally accepted. The same applies to LTTE also.//

First thing you can not compare LTTE with Maoists. As LTTE is not trying to replace the existing SriLankan government with them military power. All they are trying is getting Tamils home lands as separate state for Tamil minorities.

Tamils are native ethics of Sri Lanka who living there before Singala started to evolve as budist. LTTE respect the Singala ethics but not them state terror over Tamils. They are fighting against Sin gala state terror not Singalish.

For more information on LTTE Vs Maoists please refer the bellow article.

http://www.puthinam.com/full.php?2b36OOE4a3dgcCq34d02Unr2b03V4AIb4d3bOoC4e0db5Kvfce0ceYl02ccerh2E3e

We always welcome your questions.