Sunday, December 7, 2008

எங்களுக்காக வாழ்க! - பேரா. அறிவரசன்

உலகம் முழுவதும் வாழ்கின்ற
ஒன்பது கோடித் தமிழர்க்கு
நிலமொன் றில்லை; உரிமையுடன்
நிமிர்ந்து வாழவோர் நாடில்லை
பலரும் தமிழரை அடிமையராய்ப்
பார்க்கும் அவலம் தீர்ப்பதற்கு
வலுவுடன் எழுந்து போர் உடற்றும்
மாண்புசேர் தலைவ! வாழியவே!















ஆற்றல் மறவ! அருந்தலைவ!
அன்னைத் தமிழை அரவணைத்துப்
போற்றிக் காத்து வளர்க்கின்ற
புகழ்ப் பிர பாகரப் பெரியோய்! உன்
ஏற்றம் அறிவோம்; பகையிருளை
எற்றித் தள்ளித் தமிழ்ஈழ
நாட்டைத் தருவாய் விராவாக
நல்வோய்! பல்லாண்டு வாழியவே!

வீரம் விளையும் ஈழத்தில்
வேற்றுச் சிங்களர் தமையகற்றிச்
சீரும் சிறப்பும் தமிழர்க்குச்
சேர்த்திட விரும்பி ஆர்த்தெழுந்து
போரினை நடாத்தும் புலிப்படையின்
புகழ்மேம் பட்ட தமிழ்த்தலைவ!
பாரிய வளமுடன் நலம்பெற்றுப்
பல்லாண்டு வாழிய! வாழியவே!

வெல்லுந் திறத்தால் சிறந்தவனே!
வேலுப் பிள்ளை பார்வதித்தாய்
செல்வனாய்ப் பிறந்து தமிழீழத்
தேசியத் தலைவராய் உயர்ந்தவனே!
நல்ல தமிழினம் உரிமையுள
நாட்டை அமைத்திட உழைப்பவனே!
பல்வகைச் சிறப்பும் நீபெற்றுப்
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

கார்த்திகைத் திங்களில் நீ பிறந்தாய்
காரிருள் நீக்கிட நீ வளர்ந்தாய்
போர்த்திறத் தால்தமிழ் இனம்காக்கும்
பொருவிலாத் தலைவனாய் வடிவெடுத்தாய்
தீத்தகைச் சிங்களர் தமைவென்று
செந்தமிழ் ஈழத்தை நீசமைப்பாய்
ஏத்துகி றோம்உனை எம்தலைவ!
இனும்நூ றாண்டுகள் வாழியவே!

தம்பியாய் இருந்தாய்; இன்றெமக்குத்
தலைவராய் உயர்ந்தாய்; உன்திறத்தால்
எந்தமிழ் ஈழ விடுதலையை
எமக்குநீ தருவாய் என்றுனையே
நம்பியே நிற்கிறோம்; ஐ. நா - வில்
நாளை தமிழ்க்கொடி நாட்டிடுவோம்
பைந்தமிழ்த் தலைவ! நனிசிறந்து
பல்லாண்டு பல்லாண்டு வாழியவே!

பிரபா கரனே! தமிழர்க்குப்
பெருமை சேர்க்க வந்தவனே!
அறிவால் உயர்ந்தோய்! பகையழிக்கும்
ஆற்றலில் சிறந்தோய்! விடுதலையே
குறியாய்க் கொண்டு களங்களிலே
கொற்றம் விளைக்கும் கொற்றவனே!
நிறைவாய் நலங்கள் பலபெற்று
நெடியபல் லாண்டுகள் வாழியவே!

ஞாலம் முழுதும் வாழ்கின்ற
நந்தமி ழர்க்கொரு நற்றுணையே!
ஆளும் உரிமை தமிழர்க்கே
ஆக்கிட உழக்கும் ஆற்றலனே!
சூழும் பகையிருள் தனைவிரட்டும்
சுடர்மிகு பிரபா கரனே! உன்
தோளின் வலிமையால் எமைக்காக்கத்
தூயவ! பல்லாண்டு வாழியவே!

ஐம்பத் தைந்தாம் அகவையிலே
அடிவைத் தெழுந்து நிற்கின்ற
எங்கள் தலைவ! இருபதுசேர்
இளைஞன் போல நெஞ்சுரத்தால்
பொங்கித் தளும்பும் உன்வீரம்
போற்றிப் பலநூ றாண்டுகள்நீ
எங்களுக் காக வாழ்கவென

0 comments: